search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dehradun"

    • வந்தே பாரத் ரெயில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும்.
    • டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லி - டேராடூன் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று துவங்கி வைக்கிறார். இது உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். ரெயில் சேவை இன்று துவங்கப்படும் நிலையில், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான முதல் ரெயில் சேவை மே 29 ஆம் தேதி துவங்கும் என்று ஐஆர்சிடிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 302 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

     

    கட்டண விவரங்கள்:

    டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1890 ஆகும். 22457 எண் கொண்ட இந்த ரெயில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து 17.50 (5.50) மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு 22.35 (10.35) மணி அளவில் சென்றடையும்.

    டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு கோச்கள் உள்ளன.

    தற்போதைய நிதியாண்டில் ஆறு வந்தே பாரத் ரெயில்கள் ராணி கமலாபேட்-ஹசரட் நிசாமுதீன், செகந்தராபாத்- திருப்பதி, சென்னை - கோயம்புத்தூர், அஜ்மீர் - டெல்லி கண்டோன்மெண்ட், திருவனந்தபுரம் செண்ட்ரல்-கசர்கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்தடங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.

    புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவனை இமாசல பிரதேச போலீசார் கைது செய்தனர். #Pulwamaattack
    ஷிம்லா:

    காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தசீன் குல் என்ற மாணவர் இமாசலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை போட்டிருந்தார்.

    இது பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை இடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து போலீசிலும் புகார் செய்தது. அதன்பேரில் மாணவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.

    இதைப்போல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக்கல்வி நிறுவனம் ஒன்றில் 2-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் படிப்பு படித்து வரும் காஷ்மீரை சேர்ந்த 4 மாணவிகள், புலவாமா தாக்குதலை கொண்டாடி உள்ளனர். அது தொடர்பான படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

    அந்த மாணவிகளை இடைநீக்கம் செய்த கல்வி நிறுவனம், அவர்கள் மீது போலீசிலும் புகார் செய்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018
    டோராடூன்:

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி, மற்ற மாணவர்கள் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். சுமார் 55 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



    முன்னதாக அவர் பேசும் போது, யோகா உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு கருவியாகி உள்ளதாக கூறினார். இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா செய்து வருகின்றனர். 
    சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி தலைமையில் 21-ம் தேதி டேராடூன் நகரில் நடைபெறும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi

    டேராடூன்:

    நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகரான டேராடூன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சியை நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 



    டேராடூன் நகரில் சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த யோகாசன நிகழ்ச்சியையொட்டி, மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணிகளை பா.ஜ.க.வினர் நடத்தி வருகின்றனர்.

    யோகாசனம் நடைபெறும் முகாம் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி, பிரதமர் வரும் பாதையை செப்பனிடும் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 20-ம் தேதி இரவு 9 மணியளவில் டேராடூன் நகருக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். 21-ம் தேதி அதிகாலை வனத்துறை ஆராய்ச்சி மையத்துக்கு செல்லும் அவர், காலை 6.45 முதல் 7.45 மணிவரை யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  



    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறை ஆராய்ச்சி மையம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    டேராடூன் நகரம் முழுவதும் போலீசார், துணை ராணுவம் மற்றும் கருப்பு பூனை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை ஆராய்ச்சி மையம் பகுதியில் பதாககைளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு, டேராடூன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi
    ஆப்கானிஸ்தான் அணி 2-வது டி20 போட்டியில் ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தமிம் இக்பால் 43 ரன்னிலும், முஷ்பிகுர் ரகுமான் 23 ரன்னிலும்,  அபு ரைடர் ரோனி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 135 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய மொகமது ஷசாத் 24 ரன்களும், உஸ்மான் கனி 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சாமுல்லா ஷென்வாரி அதிரடியாக ஆடி 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகமது நபி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து, வங்காள தேசத்துடனான டி-20 தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது. #Afghanistan #Bangladesh #T20
    உத்தரக்காண்ட் மாநிலத்தில் தரமற்ற மதிய உணவு குறித்து புகார் அளித்த 11 வயது சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #DehradunBoy
    டேராடூன்:

    உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன்  மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ராகுல் என்ற சிறுவன் 5-ம் வகுப்பு பயின்று வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் ராகுல் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை நஷ்ரின் பனோவிடம் புகார் அளித்தார்.

    ராகுல் மீது கோபபட்ட நஷ்ரின் அவரை இரும்புக்கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராகுல் மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். ராகுலை அவன் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, ராகுலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் நஷ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #DehradunBoy
    ×