என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்கவில்லை.
- தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
* மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
* கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை.
* தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
- சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.
நாகர்கோவில்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
- தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் கோவைக்கு சுற்றுலா சென்றனர்.
- மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
பொள்ளாச்சி:
சென்னையை சேர்ந்தவர் தருண். இவரது நண்பர்கள் ரேவந்த், ஆண்டோ ஜெனிப். இவர்கள் 3 பேரும் சென்னை பூந்தமல்லியில் தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த நிலையில் தருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் மற்றும் அவர்களது நண்பர்கள், தோழிகள் என மொத்தம் 25 பேர் சென்னையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்தனர்.
பின்னர் ஆழியார் அணை பகுதிக்கு நண்பர்கள் அனைவரும் சென்றனர். அங்கு அவர்கள் ஆழியார் அணையையொட்டி உள்ள பூங்கா பகுதியை சுற்றி பார்த்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஆழியார் அணைக்கு சென்று அதனை பார்வையிட்டனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும், அணையையொட்டி உள்ள ஆழியார் ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு சென்றதும், மாணவர்கள் அனைவரும் ஆழியார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, ரேவந்த், தருண், ஆண்டோ ஜெனிப் ஆகியோர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
எதிர்பாராத விதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த மற்ற நண்பர்கள் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஆழியார் போலீசாருக்கும், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆழியார் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு ஆற்றில் மூழ்கிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
அவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- கடல் வழியாக ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு.
- சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு.
தொண்டி:
தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கடத்தலை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதியில் 'சஜாக்' எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை கடலோர பாதுகாப்பு குழு போலீசாரால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு சுமார் ஏழு முறைக்கு மேல் நடக்கும் இந்த சஜாக் எனப்படும் ஒத்திகை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ லைத் தடுப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிர வாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தொண்டி கடல் பகுதிக்கு அருகே உள்ள இலங்கை கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் போன்ற அன்னியர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடலில் வரும் படகுகளை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வேறு ஏதும் கடத்தல் பொருட்கள் உள்ளதா? ஆயு தங்கள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா? என படகுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடல் மார்க்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை வழியாவும், சாலை வழியாகவும் சோதனைச் சாவடிகளில் தீவிரகண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்பிக்கும் எஸ்.பி.பட்டினம் முதல் தேவி பட்டணம் வரை உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குடும்பத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் துளசி மற்றும் ஏட்டு, போலீசார் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிக ளில் புதிய நபர்கள் நட மாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
- பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
- செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி" விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தா ராமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததிராய், து.ராஜா, குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காசி ஆனந்தன், ஆ.சக்தி தாசன், வை.பாலசுந்தரம், காதர்மொய் தீன், ஜவாஹி ருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2025-ம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.எஸ்.சலம், பெரியார் ஒளி விருதினை திரைப்படக் கலைஞர் சத்யராஜ்க்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:-
அம்பேத்கர் சுடர்-கே.எஸ்.சலம், பெரியார் ஒளி-சத்யராஜ், திரைப்படக் கலைஞர். மார்க்ஸ் மாமணி-தியாகு பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், காமராசர் கதிர்-வெ.வைத்தி லிங்கம் முன்னாள் முதல்-அமைச்சர், புதுச்சேரி.
அயோத்திதாசர் ஆதவன்-பா.ஜம்புலிங்கம், காயிதே மில்லத் பிறை-பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி, செம்மொழி ஞாயிறு-அ.சண்முகதாஸ்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
- 3,935 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிசி தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
- 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
* சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
* மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி.
- பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 22-ந்தேதி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்தது.
இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2, 200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. நேற்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. ஒரு கிராம் ரூ.10-ம், ஒரு சவரன் ரூ.80-ம் குறைந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 5-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-04-2025- ஒரு கிராம் ரூ.111
23-04-2025- ஒரு கிராம் ரூ.111
22-04-2025- ஒரு கிராம் ரூ.111
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏப்.25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
- தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.
சென்னை:
முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.
மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.
இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.
- நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
- இன்று மாலை முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
ஊட்டி:
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். நாளை மறுநாள் ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அதன் பின்னர், அன்று காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்குதளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.






