என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Militants attacks"

    • விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
    • லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.

    இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
    • போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரி:

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

    இந்தநிலையில் ஐதராபாத்திற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். முகம்மத் பயாஸ் என்ற வாலிபர் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    மனைவியை சந்திப்பதற்காக பயாஸ் இந்தியாவிற்கு எந்தவித விசாவும் இல்லாமல் நேபாளம் வழியாக ஐதராபாத் வந்துள்ளார்.

    பயாசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள்.
    • காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது.

    டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வருமான ஹபீஸ் சயீத் மற்றும் துணை தலைவர் சைபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள். எப்போதுமே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு காட்டுக்குள் சென்று பதுங்கு குழியில் இருப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து புதிய தாக்குதலுக்கு உத்தரவுகள் வரும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்வார்கள். மேலும் டி.ஆர்.எப். அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை ஆகியவை உதவிகள் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த அமைப்பில் பெரும்பாலான வெளி நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உள்பட காஷ்மீர் முழுவதும் பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    ஓசூர்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.

    • பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.

    நாகர்கோவில்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நட்த்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்ற னர்.

    பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×