என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
    • ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள்.

    ஒரு பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள், எனக்குள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் பெண்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்ட பிறகு, இது உலகையே மாற்றும் வல்லமை உடையது என்பதை உணர்ந்தேன் என ஈஷா கிராமோத்சவ அனுபவம் பகிர்கிறார் ஆயிஷா.

    ஈஷா கிராமோத்சவம் தன்னுடைய வாழ்விலும், கிராமத்திலும் உருவாக்கிய மாற்றங்கள் குறித்து நெல்லூர் மாவட்டம், கோட்டால் கிராமத்தை சேர்ந்த ஆயிஷா நம்மிடம் கூறுகையில், "ஈஷாவில் இருந்து விளையாட வாருங்கள் என்று அழைத்த போது, நான் மிகவும் தயங்கினேன், சின்ன வயதில் விளையாடியது பிறகு விளையாட்டு என்பதே என் வாழ்வில் இருந்தது கிடையாது.

    ஆனால் இது கிராம மக்களுக்கான குறிப்பாக பெண்களுக்கானது எனக் கூறிய போது, என் வீட்டில் இருந்த அம்மா, பெரியம்மா, அண்ணி ஆகியோர் இணைந்து விளையாடத் துவங்கினோம். முதல் நாள் அந்த பந்து என் கைகளுக்கு வந்த உடனே விளையாட்டின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரம் சென்றது தெரியாமல் நாங்கள் விளையாடினோம்.

    எங்களின் கிராமத்தில் இருந்து முதலில் என்னுடைய குடும்பத்தில் இருந்து மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதில் 13 வயது முதல் கிட்டத்தட்ட 60 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். என் அம்மாவுக்கு 50 வயது, பெரியம்மாவிற்கு 60 வயது, என் உறவுக்கார சிறுமிக்கு 18 வயது. நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடினோம். நாங்கள் போட்டிகளில் தோற்றாலும் இப்படி விளையாடியது எங்களுக்குள் பெரிய மகிழ்ச்சியை தந்தது.

    என் பெரியம்மாவிற்கு ஒரு டிபன் கடை உள்ளது, அவரின் வாழ்க்கை முழுவதும் கடையில் வேலை செய்வது, பிறகு வீட்டில் வேலை செய்வது என்றே பார்த்து இருக்கிறேன். நாங்கள் விளையாடிய போது அவரின் முகத்தில் பெரிய புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்தேன்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே விளையாடும் போது பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனாலேயே வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.

    நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து எங்கள் உறவினர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி விளையாடினோம். ஆனால் அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமை என்பது எல்லாம் கடந்து நாங்கள் அனைவரும் ஒரே அணியாக விளையாடினோம்.

    தனிப்பட்ட வகையில் நான் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்தவுடன், அப்படி ஒரு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் மாறி உள்ளது.

    ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள். அந்த பந்து என் கைகளுக்கு வருவதற்கு முன்பு அது எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது ஒரு விளையாட்டு எப்படி எனக்குள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, சமூக பிரிவினைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது, உடல் ரீதியாக நம்மை உறுதியாக வைக்க உதவுகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது, பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நிஜத்தில் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருகிறேன்." எனக் கூறினார்.

    • பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
    • உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் நான் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.

    நம்மை மேலயும், கீழயும் மோசமாக ஆட்சி செய்து வருகிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

    பாஜக அரசுதான் நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவங்க நல்லது செய்வாங்கள் என்று தேர்ந்தெடுத்தோம். ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில், எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

    ஆனால், எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம் கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.

    உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற-னு நீங்களே சொல்லிட்டு, இப்போ நீங்க சொல்றது எல்லாமே ரீல்ஸ் தான். அதுல எல்லாமே பாதியில அறுந்தும் போய்டுச்சு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    =======================================

    • பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
    • தேர்தலில் தில்லு முல்லு செய்ய மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று இரவு அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசு மக்களை கொடுமை படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜீரோ போட்ட முகவரியில் வசிப்பதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    2029-ல் பாஜக-வின் ஆட்சிய முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரு நேரத்தில் தேர்தலை நடத்த திட்ம். அப்போதுதானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலைகளை எளிதாக செய்ய முடியும். இதற்கு பெயர் ஜனநாயக படுகொலை.

    பாரளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எம்.பி. தொகுதி கிடைக்கும் வகையில் மோசடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் தவெக முதலில் எதிர்த்தது. எதிர்க்கிறோம். எதிர்ப்போம். தென்இந்திய மாநிலங்களில் அதிகாரத்தை குறைப்பதற்கான மோசடி வேலைகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு, Sir. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.

    இவ்வாறு பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

    • நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும்.
    • சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    281. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் & 375)

    282.ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் & 376)

    283.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் களையப்படும். (வாக்குறுதி எண் & 378)

    284.தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 379)

    285. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 380)

    286. காவலர்கள் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 385)

    287. காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான தண்டனைகள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வகை செய்யப்படும். (வாக்குறுதி எண் & 386)

    288.காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தாமதமின்றி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 387)

    289.ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 390)

    290. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 391)

    291.பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு போன்ற நகரங்களில் ஆட்டோ நகர்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 392)

    292.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் புதிய புறநகர்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். (வாக்குறுதி எண் & 393)

    293.சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் முறை இரத்து செய்யப்பட்டு, புதிய குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 394)

    294.அனைத்து கிராமங்களிலும் காலாவதியான குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்களைப் பதிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 395)

    295.சென்னைக்கு குடிநீர் வழங்க நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 396)

    296.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 397)

    297.வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாத தவணை முறையில் வாங்கப்பட்ட வீடுகளுக்கு விற்பனைத் தொகை முழுவதையும் செலுத்திய பிறகும் விற்பனை பத்திரம் வழங்கப்படாதவர்களின் பிரச்சினையை ஆய்வு செய்து, கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 399)

    298.தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும். புதிய சமத்துவபுரங்களும் கட்டப்படும். (வாக்குறுதி எண் & 400)

    299.இந்திரா நினைவு வீட்டுவசதித் திட்டம், குடிசை மாற்று வாரிய வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த வீடுகள் சீரமைத்தோ, புதுப்பித்தோ வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 401)

    300.பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுமையாக ஆவின் நிறுவனத்திடம் விற்பனை செய்ய வகை செய்யப்படும். பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 403)

    • மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
    • மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம், மன்னிக்கணும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

    போருக்கு செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்குவது வழக்கம், ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்.

    சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்திற்கு தூக்கிக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

    மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.

    மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வாழ்க வசவாளர்கள்.

    அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? மக்களின் அன்புக்காக எதையும் செய்வேன்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை.
    • காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். 8 கி.மீ. தூரத்தை 4 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தார். திருச்சி மரக்கடையில் பேசிய விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார். பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார்.

    திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அன்பின் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன்.

    கூட்டம் வந்திருப்பதாக சொன்னார்கள். முழுமையாக பார்த்திவிட்டு, அதன்பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்" என்றார்.

    • தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை.

    கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

    திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. மக்கள், தொழிலை பற்றி கவலை இல்லாத அரசாக திமுக உள்ளது.

    போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!

    ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

    இவ்வாறு அவர கூறினார்.

    • எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
    • நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

    அப்போது, விஜய் ஆளும் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

    பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.

    எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

    கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும்; பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise.

    நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.

    திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் தி.மு.க. அரசு நன்றாக காசு பார்க்கின்றது

    அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என தி.மு.க சொன்னது செய்ததா? இப்படியே நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். தி.மு.க-வினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை

    டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது?

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? மின்கட்டண கணக்கீடு மாதம் தோறும் எடுப்பதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    • கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேள்வி எழுப்பினார்.
    • விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேட்க, 'இல்லை இல்லை' என கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், விஜய் பேச்சை கேட்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்த மக்களும் விஜய் கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சியில் தனது முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    • இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

    இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

    இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில், இசைஞானிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    ×