என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விடியல் எங்கே? திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்
    X

    விடியல் எங்கே? திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்

    • நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும்.
    • சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    281. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் & 375)

    282.ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் & 376)

    283.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் களையப்படும். (வாக்குறுதி எண் & 378)

    284.தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 379)

    285. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 380)

    286. காவலர்கள் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 385)

    287. காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான தண்டனைகள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வகை செய்யப்படும். (வாக்குறுதி எண் & 386)

    288.காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தாமதமின்றி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 387)

    289.ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 390)

    290. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 391)

    291.பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு போன்ற நகரங்களில் ஆட்டோ நகர்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 392)

    292.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் புதிய புறநகர்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். (வாக்குறுதி எண் & 393)

    293.சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் முறை இரத்து செய்யப்பட்டு, புதிய குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 394)

    294.அனைத்து கிராமங்களிலும் காலாவதியான குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்களைப் பதிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 395)

    295.சென்னைக்கு குடிநீர் வழங்க நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 396)

    296.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 397)

    297.வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாத தவணை முறையில் வாங்கப்பட்ட வீடுகளுக்கு விற்பனைத் தொகை முழுவதையும் செலுத்திய பிறகும் விற்பனை பத்திரம் வழங்கப்படாதவர்களின் பிரச்சினையை ஆய்வு செய்து, கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 399)

    298.தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும். புதிய சமத்துவபுரங்களும் கட்டப்படும். (வாக்குறுதி எண் & 400)

    299.இந்திரா நினைவு வீட்டுவசதித் திட்டம், குடிசை மாற்று வாரிய வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த வீடுகள் சீரமைத்தோ, புதுப்பித்தோ வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 401)

    300.பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுமையாக ஆவின் நிறுவனத்திடம் விற்பனை செய்ய வகை செய்யப்படும். பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 403)

    Next Story
    ×