என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.

    • ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.

    யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.

    யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.

    மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வால் மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
    • நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது:

    வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.

    இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.

    நீட்...

    நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.

    நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.

    1. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

    2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன்.

    3. நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.

    நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.

    இதற்கு நிரந்தர தீர்வாக, அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வேளை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

    • ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

    இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.

    ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது.
    • தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கெடார் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது. அப்போது கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.தான். இதை மறந்துவிடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.

    இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எடுத்துக்கொண்டு போகும்போது என்ன செய்தீர்கள்? உங்களால் தடுக்க முடியவில்லை. பள்ளிக்கூடங்கள், பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.

    ஒரு மாநில கட்சி, ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க.தான். அன்றெல்லாம் இவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன போராட்டம் செய்தார்கள்?

    தமிழில் வழக்காடு மொழிகள் வேண்டும் என பல போராட்டங்களை தி.மு.க.வினர் நடத்தினார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எனது தாய்மொழியில் வழக்காடும் மொழி வேண்டும் என கேட்டிருந்தால், அதை பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. எந்த இடத்திலுமே இவர்கள் சரியாக நின்றது கிடையாது.

    தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பற்றி சிந்திக்காத அரசு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிற மதுவை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்ய என்ன வழி என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக தகவல்.
    • தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.

    இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது.

    டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    2027-ம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த புதிய , ஐடி வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கும் என்று கேப் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், என்ஜினீயரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும்.

    மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜினீயரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.

    சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கேம்பஸ் என்றால் டி.சி.எஸ். நிறுவனத்தின் சிறுசேரி கேம்பஸ் தான். இதை முறியடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்சின் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சென்னையில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் இன்னோ வேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறு வனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திர மோகன் கூறி உள்ளார்.

    கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம்காட்டு வதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

    • திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
    • மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.

    இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா அரங்கிற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை புரிந்தார். ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர்.

    • வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
    • கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை மாத தொடக்க நாளான ஜூலை 1-ந்தேதி உயராத நிலையில் அதற்கு அடுத்த நாட்களில் சற்று உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,695-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
    • தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.

    பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.

    தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விவசாய தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 532 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் விவசாய தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் இருப்பதால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடிக்குள் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிலிகுண்டுவுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 79.54அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9ஆயிரத்து 807கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2917 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 532 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணை இன்னும் சில நாட்களில் நிரம்பும் நிலையில் உள்ளது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையும் இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 39.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 818 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வரச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஆண் யானை ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அருகே மூலவாய்க்கால், குமரகிரி முருகன் கோவில் அருகே வந்தது.

    இந்த கோவில் மலைமேல் உள்ளது. சுற்றி வனப்பகுதி அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் வழி தவறி வந்த ஆண் யானை குமரகிரி முருகன் கோவில் மலைப்பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆண் யானை பார்க்க மிகவும் பிரம்மாண்டமாக பெரிய தந்தங்களுடன் ஆவேசமாக மலைப்பகுதி சுற்றி சுற்றி வருகிறது. யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.டி. என். பாளையம் ரேஞ்சர் மாரியப்பன், விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டி, வன அலுவலர் பழனிச்சாமி மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது. யானை ஊருக்குள் புகுந்த செய்தி காட்டு தீ போல் பரவியதால் யானை பார்க்க 100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடிவிட்டனர். கூட்டத்தை கண்டதும் யானை மேலும் ஆவேசம் அடைந்து பிளிரியபடி சுற்றி சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வருகிறது.

    யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    • விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் 960 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×