என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
    • 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது:-

    ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக என்ற நோக்கத்தோடு, வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவ பகிர்வு விவசாயிகளையே சென்றடையும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் புதிதாக களம் காணும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

    இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.
    • தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து பாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூங்குபவர்களை எழுப்பலாம்... ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

    தமிழ்நாட்டில் 60% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத் தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டின் இன்றையத் தனிப்பெரும் தேலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சமூக நீதி சார்ந்து தமிழ்நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக, உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மீறி, 69% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சிறப்புச் சட்டத்தின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வைத்து செயல்படுத்தி வரும். பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    ஆனால், அந்தப் பெருமை இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரக் கூடும்.

    69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்பாச்.சுபாடியா தலைமையிலான அமர்வு 69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அருனடிப்படையில் இட ஒதுக்கிட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்" என்று ஆணையிட்டது.

    ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கிட்டை எதிர்த்து சிவர் 2012ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? என்று வினா எழுப்பினர்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 68%க்கும் அதிகம் என்பதை ஆதாரங்களுடன் அரசு நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்கான ஆபத்து இருக்கிறது.

    அந்த ஆபத்தை முடியடிப்பதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். அவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது

    என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான் என்பதை அன்பையில் பிகாரிலும், தெலுங்கானாவிலும் நடத்தப்பட்ட அதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு பட்டும் தான் அதை புரிந்து கொள்ளவும். ஏற்கவும் மறுக்கிறது.

    தமிழ்நாட்டை ஆளும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும், சாதியாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    ஆனால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்ற பழைய பல்லவியையே தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும். மீண்டும் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சமூகநீதியின் இம்மியளவும் அக்கறையில்லை.

    இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்ற வினா எழுந்திருக்கிறது.

    இது குறித்து சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுடன் விவாதிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.

    சென்னை தியாகராயர் நவர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் நாளை, பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகிய நான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம்.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெஜான்பாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, நாடார் மகாஜன எங்கத் தலைவர் கரிக்கோல் ராஜன், யாதவ மகாசபை சங்கத்தின் தலையர் நாசே இராமச்சந்திரன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர், வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்.
    • கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டம்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
    • உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.

    மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
    • விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.

    அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

    விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.

    விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.

    திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆட்சி மாற்றம் காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
    • யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.

    தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.

    மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
    • கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.
    • கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டதால், நிரந்தர ஓய்வெடுக்க அலைகள் தாலாட்டும் வங்கக் கடற்கரைக்கு நம் தங்கத் தலைவர் சென்றபிறகு, அவருடைய அன்பு உடன்பிறப்புகளான நீங்கள், கழகத் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தினீர்கள்.

    கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.

    இடைத்தேர்தல் பணிகளைக் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிப் பிரமுகர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

    ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் ஆய்வுப் பணிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான சந்திப்புக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலே மக்களின் பேரன்பும், தாய்மார்களின் பாசமும், உடன்பிறப்புகளின் கொள்கை உணர்வும் பொங்கிப் பெருகுவதைக் காண்கிறேன். அதில் நெல்லைப் பயணம் மிகுந்த உற்சாகத்தை எனக்கு அளித்துள்ளது.

    வழிநெடுகத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் சகோதரப் பாசத்துடன் அன்பைப் பொழிந்து அகம் மகிழச் செய்தனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சீர் செய்கிற அண்ணனாக, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தங்கள் வேலை சார்ந்த பயணத்தை எளிதாக்கிய சகோதரனாக என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள். மாணவியர் பலரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் கழக அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, "இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது" என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? "அப்பா.. அப்பா.." என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் கழக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன்.

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது. அரசு நலத்திட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1304.66 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 23 பணிகளைத் தொடங்கி வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நெல்லை மக்களின் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதைச் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் மெய்ப்பித்துள்ளேன், உங்களில் ஒருவனான நான்.

    மாவட்டக் கழகத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்தவர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளைச் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சியின் அடித்தளமாக இருக்கின்ற கட்சியின் செயல்வீரர்களில் ஆற்றல் மிக்கவர்களை அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள முடிந்ததது. ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் நெல்லை மாவட்டம் என்றும் கழகக் கோட்டையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்தில் தனக்கேயுரிய ஆற்றலுடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள். சொந்த மாவட்டமான திருச்சியாக இருந்தாலும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும் எதையும் நேர் செய்துவிடக்கூடியவர் நேரு என்பதை நெல்லை மாவட்ட விழா மேடையிலேயே தெரிவித்தேன். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிறைவேற முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணம் என்பது இருட்டுக்கடை அல்வாவின் இனிய சுவையாக நெஞ்சில் இனித்த வேளையில்தான், பிப்ரவரி 8ஆம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

    மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

    மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

    இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

    அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    ஒன்றிய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.

    இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
    • உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது.

    கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

    இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, மு.க.ஸ்டாலின் அவர்களே?

    செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 6-ந்தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.

    கே.வி.குப்பம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து கீழே தள்ளவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயிலில் செல்லும் பணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் படி, ரெயில்வே ஐ.ஜி. பாபு, சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவு ரெயில் மற்றும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் பெட்டியில் தனிநபராக பயணம் செய்யும் சூழ்நிலை இருந்தால் மற்ற பெட்டியில் சக பயணிகளோடு பயணம் மேற்கொள்ளவும், மர்ம நபர்கள் யாரேனும் தவறாக நடக்க முயற்சி செய்தால் ரெயில் பெட்டியில் உள்ள அவசரநிலை செயினை பிடித்து இழுக்கவும், அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.

    திருவொற்றியூர்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். இதில் திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் லூப் லைன் பாதை உள்ளது.

    இந்த இணைப்பு தண்டவாளத்தின் இடையே பெரிய இரும்பு துண்டு மற்றும் கற்களை மர்ம நபர்கள் வைத்து சென்று விட்டனர். அவ்வழியே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்ய சென்ற போது இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றினர்.

    சரியான நேரத்தில் இணைப்பு தண்டவாளத்தில் இருந்து அவை அகற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் லூப்லைனை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த நேரத்தில் அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் ஏற்பட்ட பிரச்சனையால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ரெயில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு மற்றும் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.

    மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.

    பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளி சென்று இருந்தனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×