என் மலர்tooltip icon

    கேரளா

    • 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கி வருவதாக குறிப்பிட்டார்.
    • இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை.

    நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    மத்திய அரசு கேரளா மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வருவதாக சாடிய அவர், நிதிப் பங்கீட்டை குறைத்தும், 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கியும் வருவதாக குற்றம் சாட்டினார்.

    மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து, ஜனவரி 12 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.இதில் கேரளாவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை என்று பினராயி விஜயன் விமர்சித்தார்.  மேலும் amerik

    • உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
    • வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.

    வெனிசுலாவை தாக்கி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

    நேற்று நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், "வெனிசுலா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. அமெரிக்க அரசு சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக, ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது.

    ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், அதன் அதிபரைக் கைது செய்வது அமெரிக்காவின் அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

    அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையானது, உலகின் பிற நாடுகளில் அத்துமீறித் தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றையே மீண்டும் ஒருமுறை பிரதிபலிக்கிறது.

    இது ஒன்றும் புதிதல்ல; தனது விருப்பத்திற்கு மாறான ஆட்சிகளை அகற்றுவதே அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த காலங்களில் தனது சுயநலத்திற்காக அமெரிக்கா உருவாக்கிய போர்களாலும், ராணுவத் தலையீடுகளாலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதை உலகம் மறக்காது.

    அதே போன்ற ஒரு ஆபத்தான சூழலைத் தான் இப்போது வெனிசுலாவிலும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

    ஒரு நாட்டின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மற்றொரு நாடு ராணுவ பலத்தைக் கொண்டு அகற்றுவது உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.

    அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.

    அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவத்தொடங்கியது. இந்த காய்ச்சலுக்கு பலர் இறந்துவிட்ட நிலையில், கோழிக்கோடு புதியங்காடி பகுதியை சேர்ந்த சச்சிதானந்தன்(வயது72) என்ற முதியவர் தற்போது இறந்திருக்கிறார்.

    மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு இந்த நோய் எப்படி பரவியது? என்பது தெரியவில்லை.

    இதற்காக சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.

    காதல்...

    அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அது "காதல்" தான். அதிலும் மனிதனின் காதல் தனித்துவமிக்கது. அது தரக்கூடிய உணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்களும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்தவர்களும் உண்டு.

    அதே நேரத்தில் தனது மனம் விரும்பிய ஒருவரை கரம்பிடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளும் உண்டு. அப்படித்தான் வாலிப பருவத்தில் காதலித்த இருவர், தற்போது 60 வயதுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.

    கேரளாவில் அரங்கேறியிருக்கும் அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற பயந்திருக்கிறார். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இறுதியில் அவரும் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரின் துணைகளும் அடுத்தடுத்து இறந்தனர்.

    ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாசின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் திடீரென இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் குழந்தைகளே வாழ்க்கை என நினைத்து, வேறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.

    கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்காக ரஷ்மி, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டார். மேலும் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். ஜெயபிரகாஷ் தனது குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை ஜெயபிரகாஷ் பார்த்தார். தனது வாலிப பருவ காதலி குறும்படங்களில் நடிப்பதை அறிந்து அவர் உள்ளத்தில் மகிழ்ந்தார். அவரை தொடர்பு கொண்டு பேச துடித்தார். இறுதியில் குறும்பட இயக்குனரிடமிருந்து ரஷ்மியின் மகள் செல்போன் எண்ணை வாங்கினார்.

    அதில் தொடர்பு கொண்டு ரஷ்மியிடம் பேசினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழைய உறவு மீண்டும் துளிர்விட்டது. அதே நேரத்தில் இருவரின் துணைகளும் இறந்த விவரத்தை இருவரும் அறிந்துகொண்டனர். தற்போது மறுமணத்துக்கு பெண் தேடி வரும் விவரத்தை ரஷ்மியிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

    அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார். அதுபற்றி ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் கூறினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர்.

    இதையடுத்து ரஷ்மி திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக ஜெயபிரகாஷிடம் தெரிவித்தார். உடனே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. 60 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரின் திருமணம் கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

    அதில் ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணத்தை அவர்களது குழந்தைகள் முன்னின்று நடத்தி வைத்தனர். "உண்மையான காதல் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும்" என்பதற்கு சாட்சியாக வாலிப வயதில் காதலித்த ஜோடி, தங்களின் 60 வயதிற்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர்.

    ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தை ரஷ்மியின் மகள் சமூக வலைதளங்களில், "எந்த குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்" என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி.
    • முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது.

    மத்திய பாஜக அரசுக்கு சாதகமான கருத்துகளை பகிர்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், தான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீறியது இல்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-

    நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி. பல்வேறு விஷயங்களில் நான் என் கருத்துக்களைத் தெரிவித்தபோதும், பெரும்பாலான விஷயங்களில் நானும் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தோம்.

    நான் உண்மையில் என்ன எழுதினேன் என்பதை மக்கள் படித்திருக்கிறார்களா என்று நான் கேட்டால், பெரும்பாலானோர் படித்திருக்கவில்லை. முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது

    தான் 17 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், சக தோழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். இப்போது திடீரென்று எந்த தவறான புரிதலுக்கும் அவசியமில்லை.

    நான் பிரதமர் மோடியை எங்கே புகழ்ந்தேன் என்று சுட்டிக்காட்டும்படி மக்களிடம் கேட்டேன். முழுப் பதிவையும் படித்தால், அதில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    மேலும், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிறகுதான் இந்த பிரச்சனைகள் தொடங்கியதா என்று கேட்டதற்கு "நான் போட்டியிட்டு தோற்றேன். அந்த அத்தியாயம் அங்கேயே முடிந்துவிட்டது. இதில் நான் எந்தப் பெரிய விஷயத்தையும் பார்க்கவில்லை. கட்சியின் வரலாற்றில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, பலரும் வெற்றி பெற்றும் தோற்றும் உள்ளனர்" என்றார்.

    சசி தரூர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளையொட்டி "98-வது பிறந்த நாள் கொண்டாடும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை.சேவை வாழ்க்கைக்கு முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி" எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.

    ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சசி தரூர் கோபத்தில் இருந்தனர். தற்போது அத்வானியை புகழ்ந்து பேசியது மேலும், ஆத்திரமடையச் செய்துள்ளது.

    இந்த நிலையில் நான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு.
    • உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், "வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    இது ஒரு முரட்டு நாட்டின் கொடூரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. தனது சூழ்ச்சித் திட்டங்களைத் திணிப்பதற்காக, உலக தென்பகுதியில் வெளிப்படையான விரோதத்தைத் தூண்டிவிடுகிறது. இது ஒரு பயங்கரவாதச் செயலும் கூட. இதுபோன்ற தாக்குதல்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும் எதிர்த்துப் போராடிய நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கண்டமான லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.
    • தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    கேரளாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஓணம் பண்டிகையின் போது 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். அந்த வரிசையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் சாதனையை படைத்து உள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட 16.93 கோடிக்கு அதிக மது விற்பனையாகி உள்ளது. கடந்த வார விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.17 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை பாலாரி வட்டம் (ரூ.95.09 லட்சம்) பெற்றுள்ளது. தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளில் 2.07 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் பெட்டிகள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 1.84 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி இருந்தன.

    • பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
    • எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக  300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

    இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். 

    • அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
    • கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.

    அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    ×