என் மலர்
கேரளா
- திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கேரளாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது போட்டித் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பலன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
- திடீரென கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
- தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்
திருவனந்தபுரம்:
இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
கேரளாவிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.
இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்
பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது.
ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்க்கிறது.
ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர்.
- இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (வயது26). இவருக்கு 'டேட்டிங்' செயலி மூலமாக மலப்புரம் வண்டூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமானார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை உருவாக்கி உள்ளது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
அனந்த கிருஷ்ணன் வார்த்தையை நம்பிய அந்த இளம்பெண், அவர் அழைத்ததன்பேரில் பொட்டம்மல் பகுதியில் உள்ள லாட்ஜூக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். மேலும் அந்த பெண்ணும் போன் செய்ய முடியாதவாறு செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், லாட்ஜில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அனந்தகிருஷ்ணன் மீது போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.
'டேட்டிங்' செயலியில் பழகிய இளம்பெண்ணை லாட்ஜூக்கு வரவழைத்து வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன
மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
- இந்நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.
திருவனந்தபுரம்:
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனதெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பாலக்காடு பகவதியம்மன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
- இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் உருவாக்கி உள்ளார். இவரது கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடந்த பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதற்கிடையே, அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.
- தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்தனர்.
சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்தது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்குகளில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தங்க தகடு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்கனவே கைதான நிலையில் தற்போது முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை.
- குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது.
திருச்சூர்;
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த விலை மதிப்பற்ற பொருட்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடு நடந்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குருவாயூர் தேவஸ்தானத்தின் 2019-20-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-20-ம் ஆண்டு 522.86 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
குருவாயூர் தேவஸ்தான சட்ட விதிமுறைகள்படி, கோவிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை கோவில் நிர்வாகி ஆண்டுதோறும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. அதோடு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.
குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.
- ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக, சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
- பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






