என் மலர்
இந்தியா
- எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பேசிய கபில் சிபில், ராஜினாமா செய்த பின்னர் ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாள் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார். எனது அரசியல் சகாக்கள் பலர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
தனது பதவிக் காலம் முழுவதும் அரசாங்கத்தை ஆதரித்த தன்கரைப் இப்போது எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன பிரச்சனை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உள்துறை அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களிடம் நிறைய வளங்கள் உள்ளன. நீங்கள் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்புகிறீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எங்கள் துணை ஜனாதிபதி. எனவே அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுங்கள்" என்று கபில் சிபல் கோரினார்.
- முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம்.
- உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது.
சென்னை:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டு அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்கள் நடந்தது. இதில் பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை இந்தியா தாக்கி அழித்தது.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இந்திய விமானப்படை தளபதி அமர்பிரித் சிங் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முதல் முறையாக பேசினார். ஐ.ஐ.டி மெட்ராசில் இந்திய ராணுவ ஆராய்ச்சிப் பிரிவான 'அக்னிசோத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் உபேந்திர திவேதி பங்கேற்றார்.
அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு திட்டமிட்டது என்பது குறித்து அவர் கூறினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறுநாளே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. முப்படை தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது ராஜ்நாத்சிங், பொறுத்தது போதும் என்று முதல் முறையாக கூறினார்.
முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற முழு சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையான நம்பிக்கை, அரசியல் திசை மற்றும் அரசியல் தெளிவை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். முப்படைக ளுக்கும் அரசாங்கம் அளித்த அரசியல் தெளிவு மன உறுதியை அதிகரிக்க உதவி யது. அதுதான் நமது ராணுவத் தளபதிகள் களத்தில் இருந்து அவர்க ளின் விருப்பப்படி செயல் பட உதவியது.
இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு பிறகு பயங்கரவாத இலக்குகளை எவ்வாறு தாக்குவது என்பது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஏப்ரல் 25-ந்தேதி நாங்கள் வடக்கு கட்டளைப் பகுதியைப் பார்வையிட்டோம்.
பின்னர் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகளை முடிவு செய்தோம். திட்டமிடப்பட்ட 9 இலக்குகளில் 7 முக்கிய இலக்குகளை முற்றிலும் அழித்தோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 29 -ந்தேதி நாங்கள் பிரதமர் மோடியை சந்தித்தோம். ஆபரேஷன் சிந்தூர் என்ற சிறிய பெயர் முழு நாட்டையும் எவ்வாறு இணைக்கிறது என்பது முக்கியம். அதுதான் முழு நாட்டையும் உற்சாகப்படுத்தியது. அதனால்தான் முழு தேசமும் நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டது. அதற்கு போதுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, சதுரங்க விளையாட்டு போல் இருந்தது. ஏனென்றால் எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது சாம்பல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
சாம்பல் மண்டலம் என்பது நாம் வழக்கமான நடவடிக்கைகளை செய்ய போவதில்லை என்பதாகும். நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது. நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். எதிரிகளும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தனர். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது. உரி நடவடிக்கையின்போது, ஏவுதளங்களை குறி வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதல்களில், பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழியாக ஊடுருவி பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்களைத் தாக்குவதே நோக்கமாக இருந்தது. ஆப ரேசன் சிந்தூர் நடவடிக்கையில் எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் எதிரியின் மையப்பகுதியை அடைந்தது இதுவே முதல் முறை. இதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அந்நாடு ஒரு கதையை சொல்லி கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாகிஸ்தானியரிடம் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா என்று கேட்டால், அவர் எங்கள் ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் எங்கள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷலாக மாறிவிட்டார் என்று கூறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
- தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.
தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.
காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
உடுமலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே 53 லட்சம் மதிப்பில், 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நகராட்சித்துறையின் சார்பில் ரூ.34 கோடியே 80 லட்சம் மதிப்பில் திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி யில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.41 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், திருமுருகன்பூண்டியில் ரூ.39.44 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
பின்னர் 11.30 மணிக்கு உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பகல் 12 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி யில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகத்தில் பி.ஏ.பி., பாசன திட்டம் அமைய காரணமானவர்களான காமராஜர், சி.சுப்பிர மணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினை வரங்கத்தை திறந்து வைக்கிறார். மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
உடுமலையில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவை, மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை தாக்கும் செயலாகும்.
- போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பதற்கானது. நமது வாக்குரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
புதுடெல்லி:
வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு தருமாறு காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
வாக்கு திருட்டு என்பது ஒரு நபர், ஒரு வாக்கு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை தாக்கும் செயலாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு வெளிப்படையான வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே பொதுமக்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக தங்கள் ஆதரவை http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், 96500 03420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தெரிவிக்கலாம். இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பதற்கானது. நமது வாக்குரிமையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
- தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. கட்சியும் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பா.ஜ.க. கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிர் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் 66 மாவட்ட தலைவர்களும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, நிர்வாகிகள் அனைவரும் எப்படி பணியாற்ற வேண்டும், தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய பயிற்சி முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் பா.ஜ.க. தலைவர்கள், கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகனுடன் அவரது காரில் ஒன்றாக வந்து இறங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவருக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அட்சதை தூவி வரவேற்றனர். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை வழக்கத்துக்கு மாறாக கலர் சட்டை அணிந்து வந்திருந்தார்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டையை பார்த்த பிறகே அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையை நடிகை நமீதா சால்வை அணிவித்து வரவேற்றார்.
பா.ஜ.க. அலுவலகம் முன்பு கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாழை மரங்களும் கட்டப்பட்டு பா.ஜ.க. அலுவலக சாலை விழாக்கோலம் பூண்டிருந்தது.
- மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.
- ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம்.
குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார். இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும்.
அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்" என்று கூறினார்.
இதற்கிடையே "ராகுல் காந்தி ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து சீமான் ஆதரவு தெரிவித்தார்.
- மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து பேசிய சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியார் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
* தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குப்பை அள்ளும் பணியை கூட தனியாரிடம் என்றால் அரசுக்கு என்ன வேலை?
* எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?
* மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
- ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
கர்நாடகாவில் புதிதாக 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலயத்தில் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில்கள் பெங்களூரூ - பெலகாவி, அம்ரிஸ்தர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அதில் பயணம் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் உடன் இருந்தார்.
பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார்.
- ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.
- மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.
பெண் உரிமையை காக்க, பெண்கள் முன்னேற்றம் காண, பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கிட, அரசு பதவிகளில் பெண்கள் அதிகாரத்தில் அமர்ந்திட, மது, போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவில் இருந்து பாதுகாத்திட, சம உரிமை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சமபங்கு என அனைத்திலும் பெண்கள் முன்னேற்றம் காண பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் ம.க.ஸ்டாலின், பாக்கம்.சக்திவேல், தஞ்சை மண்டல பா.ம.க. செயலாளர் ஐயப்பன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என சுமார் 3 லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட நுழைவாயிலுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மேடை போடப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.
மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மணி கிராமம், மேலையூர், பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு, அதற்கான முறையான வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பூம்புகார் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு, அதனை கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநாட்டிற்கு பங்கேற்பவர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் அனைவரும் அமரும் வகையில் விரிவான பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மின்னொளியில் பந்தல்கள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகள், சுகாதார குழுவினர்களும் அமைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பொதுகுழு நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று டாக்டர்.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone)
- இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.
ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஐஐடி மெட்ராஸில் அக்னிசோத் என்ற ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஏனென்றால், எதிரி இங்கே என்ன செய்வார், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone). நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.
நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர்களும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தார். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் ஏப்ரல் 23 அன்று தொடங்கியது. அன்று, முப்படைகளின் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒரு முடிவுக்கு வந்தனர். எந்த முக்கிய முடிவையும் எடுக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள், திட்டத்தைத் தயாரித்து, ஒன்பது இலக்குகளில் ஏழு தாக்குதல்களை நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கை முந்தைய உரி மற்றும் பாலகோட் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது. உரி நடவடிக்கையில், ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டது.
பாலகோட்டில், பாகிஸ்தானில் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால் ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் எதிரி பிரதேசத்திற்குள் சென்று நர்சரி மற்றும் மாஸ்டர்ஸ் என்ற குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட முக்கிய இலக்குகளை அழித்தோம்.
இந்த நடவடிக்கையில் ஐந்து இலக்குகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரிலும், நான்கு இலக்குகள் பஞ்சாபிலும் உள்ளன. இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.
இந்த டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் நிறுத்தப்பட்டது. ஆனால் இது 14, 140 நாட்கள் அல்லது 1400 நாட்களுக்கு கூட தொடரலாம், மேலும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் தங்கள் நாட்டவரை திருப்திப்படுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங்கும் ஆபரேஷன் சிந்தூரில் 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியகாக நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






