search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். 2024: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
    X

    ஐ.பி.எல். 2024: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

    • சென்னை அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஐதராபாத் அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஐதராபாத் அணி எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணியும், தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஐதராபாத் அணியும் களமிறங்குகிறது.

    Next Story
    ×