செய்திகள்
4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர்
தென்கொரிய அதிபர் மூன் ஜே 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia
சியோல்:
தென்கொரிய அதிபர் மூன் ஜே ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia
தென்கொரிய அதிபர் மூன் ஜே ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia