செய்திகள்

இலங்கை: அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ்பாணத்தில் தமிழர்கள் போராட்டம்

Published On 2017-10-13 13:05 GMT   |   Update On 2017-10-13 13:05 GMT
இலங்கையில் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்காணவர்களை விடுவிக்க வேண்டும் என யாழ்பாணத்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு:

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது. தீவிரவாத தடுப்பு சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்றும் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள கவர்னர் செயலகம் முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தை  இலங்கை தமிழர்கள்   கடைபிடித்தனர். வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதொயொட்டி, ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு,  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News