செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ராமதாஸ்

எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் பேச்சு

Published On 2020-03-24 06:48 GMT   |   Update On 2020-03-24 06:48 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தார்.

அதேநேரத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது போதுமானதல்ல என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கருத்துகளை முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டார். அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
Tags:    

Similar News