இந்தியா
கேரளாவில் கடும் வெயில்- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
- கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை.
- கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிப்பு.
கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுத்து கேரள அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்துக்கு பிறகு கேரள அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
மேலும், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.