செய்திகள்
கே.எஸ்.அழகிரி

வருமான வரி சோதனைக்கு பயந்து குடியுரிமை சட்டத்துக்கு ரஜினி ஆதரவு- கே.எஸ். அழகிரி

Published On 2020-02-07 04:35 GMT   |   Update On 2020-02-07 04:35 GMT
வருமான வரி சோதனைக்கு பயந்தே ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சிகள் மட்டுமல்லாது உலக நாடுகளும் கண்காணித்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது.

வருமான வரி சோதனைக்கு பயந்தே அவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார். நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் அரசியல் குறித்து பேசியதால் வருமான வரித்துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி படப்பிடிப்பு தளத்தில் இருந்தவரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுகின்றனர்.

எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்றுதான் அழைப்பார். ஜோசப், முகமது என பெயர் வைத்திருப்பவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாதா? இதனை பார்க்கும் போது தமிழகத்தில் எச்.ராஜா சொல்வதைத்தான் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதோ? என சந்தேகம் எழுகிறது.

இதனை தமிழக மக்கள் கண்டித்து வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News