செய்திகள்

எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Published On 2018-11-28 10:50 GMT   |   Update On 2018-11-28 10:50 GMT
எங்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அ.தி.மு.க மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #byelection #pollachijayaraman #gajacyclone

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கோவில்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி 23 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர்பேட்டியளித்த போது கூறியதாவது:

சத்துணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்ததில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை, எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பின் அதன் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் ஏதும் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் குற்றம் சாட்டுவது அபத்தமானது.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டு சிறப்பாக பணியாற்றிக் கொண்டுள்ளனர். முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க மீட்பு பணிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க தொண்டர்களும் முகாமிட்டு சிறப்பாக செய்துகொண்டுள்ளனர்.

எங்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அ.தி.மு.க மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கிணத்துக் கடவு தாசில்தார் சங்கீதா, காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் தலைவர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் சின்னகண்ணன், அ.தி.மு.க நிர்வாகி டி.எல்.சிங், தண்டபாணி ,தாமரை ஈஸ்வரன், வினாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #byelection #pollachijayaraman #gajacyclone

Tags:    

Similar News