செய்திகள்

காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு: 4 பேர் கைது

Published On 2017-10-14 07:58 GMT   |   Update On 2017-10-14 07:58 GMT
செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கற்பழித்த 6 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

செய்யூர் அடுத்த சீக்கானங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் 22 வயது இளம்பெண் பவுஞ்சூர் கிராமத்தில் காதலனுடன் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 வாலிபர்கள் காதல் ஜோடியை மிரட்டியது. குடிபோதையில் இருந்த அவர்கள் கத்தியை காட்டி காதலனை விரட்டி விட்டு இளம்பெண்ணை கற்பழித்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த கிராமத்தினரை பார்த்ததும் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் 6 பேர் கும்பலில் 4 பேரை தனக்கு தெரியும். அவர்களை அடிக்கடி தான் வேலை செய்யும் இடத்தில் பார்த்து உள்ளதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கூவத்தூரை அடுத்த பேட்டை கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, பீமாராவ், தினேஷ், கதிர்வேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தயாநிதி, விஜய் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலையில் காதல் ஜோடிகளை குறி வைத்து கற்பழிப்பு கும்பல் அட்டூழியம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

போதையில் சுற்றும் அவர்கள் இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அதுபற்றி போலீசில் தெரிவித்தால் அவமானம் என கருதி புகார் செய்யாமல் இருந்து விடுவதால் இதை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து அக்கும்பல் கற்பழிப்பு செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட கற்பழிப்பு கும்பலில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை முறை ஈடுபட்டு உள்ளார்கள் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News