செய்திகள்
பலியான தி.மு.க. பிரமுகர் கருப்பசாமி.

பழனி அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2017-09-11 11:26 GMT   |   Update On 2017-09-11 11:26 GMT
பழனி அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலியானார். இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி:

பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 55). பழனி ஒன்றிய தி.மு.க. பிரமுகராக இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ளது. இவர் தினசரி தோட்டத்தை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள தண்டவாளம் வழியாக நடந்து செல்வது வழக்கம்.

அதன்படி இன்று காலை கருப்பசாமி தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் பாலக்காடு பகுதியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதனை கருப்பசாமி கவனிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டாகி பலியானார்.

இறந்து போன கருப்பசாமிக்கு மனைவி ஈஸ்வரி, பஞ்சு, வித்யா ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் அவரது உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்மனதையும் கரைய வைத்தது.

இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News