செய்திகள்

3-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-03-11 09:25 GMT   |   Update On 2019-03-11 09:25 GMT
குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டர் டஸ்சன் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.



இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News