search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா இலங்கை தொடர்"

    இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன்களாக டு பிளிசிஸ், டுமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கேப் டவுனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை 0-5 என ஒயிட்வாஷ் ஆனது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. மெண்டிஸ் அதிக பட்சமாக 56 ரன்னும், பெரேரா 33 ரன்னும், உடானா 32 ரன்னும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், நார்ட்ஜி தலா 2 விக்கெட்டும் நிகிடி, பெலுக்வாயோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தபோது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு 28 ஓவர்களில் 95 ரன் இலக்காக இருந்தது. ஆனால் அந்த அணி 135 ரன் எடுத்து இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கிராம் 67 ரன் எடுத்தார். மலிங்கா, பெரேரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.



    ஏற்கனவே 4 ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    இலங்கை அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சுரங்கா லக்மல், வாண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இர்ணடு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி இலங்கை அணி வரலாற்று சாதனைப் படைத்தது.

    தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டி 16-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.

    அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியதால், டி20 தொடருக்கான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் மற்றும் வாண்டர்சே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டு பிளிசிஸ் 43 ரன்கள் சேர்த்தார்.



    மில்லர், டுமினி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையாக 25 மற்றும் 31 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 189 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் விக்கெட் மளமளவென சரிந்தது. அவிஷ்கா பெர்னாண்டே 29 ரன்களும், உபுல் தரங்கா 4 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிய இலங்கை அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது வீரராக களம் இறங்கிய உடானா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் இலங்கை 150 ரன்னைத் தாண்டியது.

    உடானா 57 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை 189 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டும் பெலுக்வாயோ 2 விக்கெட்டும் ஸ்டெயின், லுங்கி நிகிடி, ஷமிசி, டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    4-வது போட்டி வருகிற 13-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனிலும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மார்கிராம், கடந்த நவம்பர் மாத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேபி டுமினியும், மூத்த வீரருமான அம்லாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக் (விக்கெட்), 4. ஜேபி டுமினி, 5. இம்ரான் தாஹிர், 6. மார்கிராம், 7. டேவிட் மில்லர், 8. லுங்கி நிகிடி, 9. அன்ரிச் நோர்ட்ஜி, 10. பெலுக்வாயோ, 11. பிரிட்டோரியஸ், 12. ரபாடா, 13. ஷமிசி, 14. டேல் ஸ்டெயின், 15. வான் டெர் டஸ்சன்.
    குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டர் டஸ்சன் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.



    இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.
    2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 128 ரன்னில் சுருண்டதால் இலங்கையின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

    டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா. 8 பேர் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். டு பிளிசிஸ் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றால், தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்து தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும்.
    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 25 ரன்னுடனும், ரஜிதா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஜிதா 1 ரன் எடுத்த நிலையிலும், திரிமானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடிக்க இலங்கை அணி 37.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 154 ரன்னில் சுருண்டது. ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அத்துடன் 2-வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
    ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதன்பின் மார்ச் 3-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    இதற்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

    1. மலிங்கா 2. பெர்னாண்டோ 3. தரங்கா 4. டிக்வெல்லா 5. குசால் பெரேரா 6. குசால் மெண்டிஸ் 7. டி சில்வா 8. திசாரா பெரேரா 9. தனஞ்செயா 10. ஏ. பெரேரா 11. ஓ பெர்னாண்டோ 12. கே. மெண்டிஸ் 13. உடானா 14. வி. பெர்னாண்டோ 15. கே. ரஜிதா 16. சண்டகன்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த பரபரப்பான டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. #SAvSL
    டர்பன்:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடே பெர்னாண்டோ 28 ரன்களுடனும், குசல் பெரேரா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் ஒஷாடே பெர்னாண்டோ (37 ரன்), அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கபளகரம் செய்தார். இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு குசல் பெரேராவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் திரட்டிய இந்த ஜோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ‘செக்’ வைத்தார். ஒரே ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வா (48 ரன்), அடுத்து வந்த லக்மல் (0) ஆகியோரை காலி செய்தார். எம்புல்டெனியா (4 ரன்), ரஜிதா (1) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவது உறுதி என்றே நினைக்கத்தோன்றியது.

    இந்த சூழலில் குசல் பெரேரா கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த விஷ்வா பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியை கரைசேர்க்கும் போராட்டத்தில் இறங்கினார். ஸ்டெயின், ரபடாவின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு திகைப்பூட்டிய குசல் பெரேரா, பெரும்பாலும் எதிரணியின் பந்து வீச்சை தானே சந்திக்கும் முனைப்புடன் செயல்பட்டார். இருப்பினும் விஷ்வா பெர்னாண்டோவும் எதிர்கொண்ட பந்துகளை திறம்பட சமாளித்தார். இலக்கை நெருங்கிய போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பதற்றத்திற்கு உள்ளானார். பந்து வீச்சு வியூகங்களை மாற்றி பார்த்தும் பலன் கிட்டவில்லை.

    உச்சக்கட்ட பரபரப்பு, நெருக்கடிக்கு இடையே நம்பிக்கையை தளரவிடாமல் நேர்த்தியாக ஆடிய குசல் பெரேரா, தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக தாக்குதலை முறியடித்து பிரமாதப்படுத்தினார். கடைசியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

    தனது 2-வது சதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா 153 ரன்களுடனும் (200 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), விஷ்வா பெர்னாண்டோ 6 ரன்னுடனும் (27 பந்து) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். வெற்றிகரமாக இலக்கை துரத்திப்பிடித்த (சேசிங்) டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். 1994-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் இன்ஜமாம் உல்-ஹக், முஷ்டாக் அகமது ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. அந்த 25 ஆண்டு கால சாதனையை இலங்கை ஜோடி தகர்த்துள்ளது. தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு கிடைத்த 2-வது வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு இதே மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.
    டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா குயின்டான் டி காக்கின் (80) சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. ஸ்டெயின் (4 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது.

    44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிசிஸ் 25 ரன்னுடனும், டி காக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். டி காக் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிசிஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 191 ரன்கள் எடுத்திருந்தது.


    5 விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் அம்பல்டெனியா

    கடைசி ஐந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா மேலும் 68 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து 259-ல் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 44 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், மொத்தமாக இலங்கையை விட 303 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. 2-வது இன்னிங்சில் இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அம்பல்டெனியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
    ×