search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி காக்"

    • பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது சதத்தை விளாசியுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.

    அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - வான்டெர் டஸன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் சதம் அடித்து அசத்தினார்.

    இந்த உலகக் கோப்பை தொடரில் இது இவருக்கு 4-வது சதம் ஆகும். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் டிகாக் உள்ளார். முதல் இடத்தில் ரோகித் (5 சதம்) 2-வது இடத்தில் குமார் சங்ககாரா (4) உள்ளனர்.

    மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 21 சதங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் ஹசிம் அம்லா (27 சதம்) டி வில்லியர்ஸ் (25 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மிக முக்கிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒரு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டி காக் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கல்லீஸ் 9 இன்னிங்சில் விளையாடி 485 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிகாக் முறியடித்துள்ளார்.

    • 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார்.
    • 3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

    சென்னை:

    ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்-அவுட் செய்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அவர் மொத்தம் 208 கேட்ச் பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டி.காக்கை (207) முந்தினார்.

    3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (205), 4-வது இடத்தில் பாகிஸ்தான் கம்ரன் அக்மல் (172), 5-வது இடத்தில் வெஸ்ட் இன்டீசின் ராம்தின் (150) உள்ளனர்.

    • ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
    • இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×