செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து - ஈரான் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

Published On 2018-06-25 21:21 GMT   |   Update On 2018-06-25 21:21 GMT
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #PORIRA
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 45-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரிகார்டோ குவாரஸ்மா ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ பயன்படுத்தவில்லை. அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் தடுத்துவிட்டார். 

ஆட்டம் முடியும் வரை ஈரான் அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. எனவே போர்ச்சுக்கல் வெற்றி பெற்று விடும் நிலை இருந்தது.

கூடுதலாக கிடைத்த நிமிடங்களை ஈரான் அணி பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கரிம் அன்சரிபர்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது. 

அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Tags:    

Similar News