search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். புல்வாமா பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இதனால் இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசியிடம் வலியுத்த இருக்கிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடன் உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பது, ஒருவேளை நாக்அவுட் சுற்றில் மோத வேண்டியிருந்தால் என்ன செய்தவது என்பது குறித்து முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்து நிர்வாகக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் வினோத் ராய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மார்ச் 23-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் தொகை வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    பெண்களுக்கான 2-வது சுற்றில் கிகி பெர்ட்டென்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில் வொஸ்னியாக்கி, ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் பேபோசை (பல்கேரியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 15-ம் நிலை வீராங்கனை பேர்ட்டியும் (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.


    ஸ்டீபன்ஸ்

    9-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் பவுலியுசென்கோவாவை எதிர்கொண்டார். அதில் கிகி பெர்ட்டன்ஸ் 6-3, 3-6, 3-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோல் 20-ம் நிலை வீராங்கனையான கோன்டாவெயிட் 3-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.


    வோஸ்னியாக்கி

    3-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். கார்சியா, சக்கரி ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது.#ProKabbadi

    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி சென்னையில் தொடங்கியது.

    இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் நடந்தன. நேற்று முன் தினத்துடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (43 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளி) ஆகியவை 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளி), தமிழ்தலைவாஸ் (42 புள்ளி) ஆகிய அணிகள் 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே ஆப்’ சுற்று கொச்சியில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடை பெறும், ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மும்பை ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி. யோதா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இரவு 9 மணிக்கு நடை பெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர்3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    31-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    தோல்வி அடையும்அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் விளையாடும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ஆடும்.

    எலிமினேட்டர்3’ ஆட்டம் 31-ந்தேதி இரவு 9 மணிக்கு நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் ஜனவரி 3-ந்தேதியும் இறுதிப்போட்டி ஜனவரி 5-ந்தேதியும் நடக்கிறது. #ProKabbadi

    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #PVSindhu
    உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, நொசோமி ஒகுஹாரா ஆகியோர் முன்னேறினார்கள்.

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிவி சிந்து 21-19, 21-17 என ஒகுஹாராவை வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றினார்.
    உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #WorldTourFinals #PVSindhu
    குவாங்சோவ்:

    உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 21-16, 25-23 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.



    கடந்த ஆண்டும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதிபெற்றார். ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். #WorldTourFinals #PVSindhu
    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #PVSindhu
    உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பிரிவில் பிவி சிந்து முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷாங் பீவென் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-9, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.



    ஆண்களுக்கான போட்டியில் சமீர் வர்மா தாய்லாந்தின் கன்டபோன் வாங்சரோயெனை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 21-9, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
    உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையை 2-1 என பிவி சிந்து தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்துள்ளார். #PVSindhu
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 16-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

    இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதே பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றைய முதல் ஆட்டத்தில் பிவி சிந்து நடப்பு சாம்பியனான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 24-22, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    இன்று நம்பர் ஒன் வீராங்கனையான சீனதைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 14-21 என பிவி சிந்து இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 21-16 என கைப்பற்றிய பிவி சிந்து, 3-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    தாய் ஜூ யிங்கிற்கு எதிராக பிவி சிந்து 7 முறை மோதியுள்ளார். இதில் தற்போதுதான் வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெறும் 110-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TeluguTitans #PatnaPirates
    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 110-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாட்னா 10-வது வெற்றியும், தெலுங்கு டைட்டன்ஸ் 2-வது வெற்றியும் பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    பாட்னா அணி இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்சிடம் 2 முறை தோற்று இருந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தெலுங்கு அணி நம்பிக்கையுடன் விளையாடும். #ProKabaddi2018 #TeluguTitans #PatnaPirates
    உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். #BWFWorldTour #PVSindhu
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று தொடங்கியது. வரும் 16-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

    இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதே பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

    இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிவி சிந்து, அகேனா யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 24-22, 21-15 என யமாகுச்சியை வீழ்த்தினார்.

    ஆண்களுக்கானா ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா, 18-21, 6-21 என நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமோட்டாவிடம் வீழ்ந்தார்.
    உலககோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவுடன் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    16 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.

    இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ‘பி’ பிரிவில் இந்தியா, பெல்ஜியம் தலா 4 புள்ளிகளுடனும், கனடா, தென்ஆப்பிரிக்கா தலா 1 புள்ளியுடனும் உள்ளன.

    கோல் வித்தியாசத்தில் இந்தியா +5 என்ற விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. பெல்ஜியம் கோல் வித்தியாசத்தில்+1 என்ற நிலையில் உள்ளது. இதனால் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கால்இறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெல்ஜியம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்தியா விளையாடும் சூழ்நிலை இருப்பதால் அது சாதகமாக இருக்கும்.

    ஒரு வேளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெல்ஜியம் அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதற்கு ஏற்ப இந்தியா விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாறாக 2-வது அல்லது 3-வது இடத்தை இந்தியா பிடித்தால் 2-வது சுற்றான கிராஸ் ஓவர் முறையில் விளையாட வேண்டும்.

    கோல் வித்தியாசத்தில் இந்தியா வலுவாக இருப்பதால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018
    ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

    இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக சென்னை திரும்பிய வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார். #BhavaniDevi

    சென்னை:

    காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது.

    இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி.யின் எலைட் திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு பவானிதேவி கூறினார். #BhavaniDevi

    ×