செய்திகள்
சூதாட்ட புகார்: இலங்கையிடம் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு விசாரணை
2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு சூதாட்டமே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததால் புகாரை விசாரிக்க ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு இலங்கை மீது விசாரணையை தொடங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் ரனதுங்கா தனது நாட்டு வீரர்கள் மீது சூதாட்ட புகார் தெரிவித்து இருந்தார். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு சூதாட்டமே காரணம் என்று அவர் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேர்வாளருமான விக்ரமசிங்கே சமீபத்தில் சூதாட்ட குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு குழு இலங்கை மீது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் உறுதி செய்தார்.
இந்த நிலையில் முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேர்வாளருமான விக்ரமசிங்கே சமீபத்தில் சூதாட்ட குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு குழு இலங்கை மீது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் உறுதி செய்தார்.