உலகம்

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்

Published On 2024-05-05 05:15 GMT   |   Update On 2024-05-05 05:15 GMT
  • சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான்.
  • சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News