இந்தியா

பா.ஜனதாவில் இணையமாட்டேன்: குலாம் நபி ஆசாத்

Published On 2022-08-27 02:39 GMT   |   Update On 2022-08-27 02:39 GMT
  • குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
  • காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குகிறார்.

புதுடெல்லி :

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். பின்னர் டெல்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'நான் விரைவில் காஷ்மீர் செல்ல இருக்கிறேன். அங்கு எனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன். பின்னர் காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குவேன். பா.ஜனதாவில் இணையமாட்டேன்' என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News