இந்தியா
ஜூன் 4-ல் தென்இந்தியாவில் பா.ஜனதா பெரிய கட்சியாக உருவெடுக்கும்- அமித் ஷா
- மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
- உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
ஜூன் 4-ந்தேதி தென்இந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளை இணைத்தால் பா.ஜனதா தனியாக மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்.
மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.