இந்தியா

இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை தெரிவிக்க வேண்டும்: பிரதமர் மோடி

Published On 2024-05-15 18:34 IST   |   Update On 2024-05-15 18:34:00 IST
  • காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன்.
  • புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.

பிரதமர் நரேந்திர மோடி மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

அரசு அமைந்த பிறகு முதல் 100 நாட்களில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும், என்னென்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகும் தொடரும்... நேற்று காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன். நாட்டு இளைஞர்களிடம் புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.

இளைஞர்களை சந்தித்த இந்த நாட்கள் எனக்கு மிகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆகவே, இன்னும் 25 நாட்களை இணைத்துள்ளேன். நாட்டின் இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Tags:    

Similar News