அமைச்சர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஐ.ஏ.எஸ். அதிகாரி: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!
- மாவட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்கள் சேகரித்துள்ளார்.
- மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளாத நிலையில், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கலந்து கொள்ளாத நிலையில், கலந்து கொள்ள இயலாது என்று தகவல் அனுப்பியதாக அமைச்சர் புகார் கூறிய நிலையில், மாநில அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது.
நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தொடரின்போது, சுற்றுச்சூழல் அமைச்சர் பங்கஜ முண்டே சந்திராபூர் மாவட்டத்தில் மாசு குறித்த ஆலோசனை குறித்து தகவலை கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஏற்கனவே, மூத்த அதிகாரிகள் இருவர் கலந்து கொள்ளாத ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தகவல்களை அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும், தன்னால் கலந்து கொள்ள முடியாது எனவும் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனால் மாநில மாசு கட்டுப்பாடு அமைப்பின் இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவசாரம் நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.