search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலாம் நபி ஆசாத்"

    • ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
    • குலாம் நபி ஆசாத் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார்.

    "சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

    • பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் , 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

    • பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
    • தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.

    அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.

    • 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்கினார்.
    • 2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத். கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரு் மாநில கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன். கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். நான் போட்டியிட்டால் அந்த ஒரு இடத்திலேயே முடங்கிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார். 2024 தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக கட்சி தொண்டர்களை தயார்படுத்தி வருகிறார்.

    ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தல் குறித்த நேரத்தில் 100 சதவீதம் நடந்துவிடும். ஆனால் சட்டமன்ற தேர்தலை பற்றி யூகிக்க மட்டுமே முடிகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த காலக்கெடு விதித்துள்ளது" என்றார்.

    2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத், அதன்பின் ஜம்மு-காஷ்மீர மாநிலத்தில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது- குலாம் நபி ஆசாத்
    • இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை- உமர் அப்துல்லா

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பா் மகிழ்ச்சியடையவில்லை." என்றார்.

    உமர் அப்துல்லா கூறியதாவது:-

    இந்த நிலையை அடைய பா.ஜனதாவுக்கு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நீண்ட காலத்திற்காக தயாராகியுள்ளோம். இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    • ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது.
    • எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு.

    ஸ்ரீநகர் :

    ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தங்களது சொந்த மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் ஒன்றுமே இல்லை. மாநிலங்களில் 2, 3 கட்சிகள் கூட்டணி அரசு அமைத்திருந்தால் அது பலன் தந்திருக்கும். எனவே தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பலன் ஏற்படாது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இப்படி இருக்கிறபோது, இவ்விரு கட்சிகளுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், அதற்கு என்ன பலன்? மம்தா பானர்ஜி எதற்காக கூட்டணி அமைக்க வேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது?

    இதேபோன்றுதான் ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. எனவே இந்த மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் என்ன கொடுக்கும்? ஒன்றும் இல்லை.

    அப்படியே ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு பிற மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. காங்கிரஸ் அவருக்கு என்ன கொடுக்கும்?

    எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

    தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கும் இடையே வித்தியாசம் இல்லை. தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

    எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் 300 இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி இல்லாமல் கூட அதே எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற முடியும், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி கண்டது, ஆனால் மாநிலங்களில் அல்ல என்று சொல்லி இருக்கிறேன். மாநிலங்களில் எங்கெங்கு வலிமையான தலைமை இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி மீண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரசில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகினர்.
    • புதிய கட்சிக்காக சுமார் 1,500 பெயர்கள் வரப்பெற்றதாக ஆசாத் தகவல்

    ஜம்மு:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காங்கிசை விட்டு விலகினர்.விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் இன்று புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார். கட்சியின் பெயர் ஜனநாயக ஆசாத் கட்சி (டெமாக்ரடிக் ஆசாத் பார்ட்டி).

    பின்னர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், 'புதிய கட்சிக்காக சுமார் 1,500 பெயர்களை உருது, சமஸ்கிருதத்தில் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்தி மற்றும் உருது ஆகியவற்றின் கலவை 'இந்துஸ்தானி'. பெயர் ஜனநாயகம், அமைதி மற்றும் சுதந்திரத்தை பிரதிவலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்து இந்த பெயரை தேர்வு செய்தேன். கொடியில் உள்ள அடர் மஞ்சள் நிறம் படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை நிறம் அமைதியையும், நீல நிறம் சுதந்திரம், கற்பனை மற்றும் வான் வரம்புகளையும் குறிக்கிறது' என்றார்.

    • குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    • எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம்

    கதுவா:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய பதவிகள் வகித்து வந்த குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் முன்னாள் மந்திரிகளும் அடங்கும்.

    எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார். அதற்காக அவர் காய் நகர்த்த தொடங்கி உள்ளார். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகி உள்ளனர். கதுவா மாவட்டம் பானி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகி உள்ளனர். கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.

    முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.

    • கேள்விகளை எழுப்புவதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டது.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தலைவர்கள் கடிதம் எழுதியதில் இருந்து அவர்களுக்கு ( தலைமைக்கு) என்னுடன் ஒரு பிரச்சினை உள்ளது. கடிதம் எழுதுவதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் 6 நாட்கள் நான் தூங்கவில்லை. நாங்கள் கட்சிக்கு ரத்தத்தை கொடுத்து உழைத்தோம்.

    தங்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் விரும்பவில்லை. பல (காங்கிரஸ்) கூட்டங்கள் நடந்தன, ஆனால் ஒரு பரிந்துரை கூட பரிசீலிக்கப்படவில்லை. அமைப்பை சரியாக அமைப்பதற்கு தலைமைக்கு நேரமில்லை.

    கட்சியில் முன்னிறுத்தப்படும் தலைவர்கள், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக கட்சியை விட்டு வெளியேறச் செய்கிறார்கள். கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டதால், அந்த அமைப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம். அதனால்தான் நாங்கள் அதில் இருந்து விலக முடிவு செய்தோம்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை, இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கு உரியது. தனிப்பட்ட முறையில் அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரை (ராகுல் காந்தியை) வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். அவருக்கு ஆர்வம் இல்லை.

    பிரதமர் மோடி ஒரு மோசமான மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான். இன்று என்னுடைய சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

    பாஜகவில் சேரமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் உள்கட்சி நிலைமை தெளிவாக வெளியே தெரிகிறது.
    • காங்கிரசுடனான 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டுள்ளார்.

    குவாலியர்:

    காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
    • குலாம் நபி ஆசாத் விலகல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய பதவிகள் வகித்து வந்த குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் முன்னாள் மந்திரிகளும் அடங்கும். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சில காங்கிரஸ் பிரமுகர்களும் காங்கிரசில் இருந்து வெளியேறி குலாம் நபி ஆசாத் பக்கம் திரும்புவார்கள் என தெரிகிறது.

    காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் காயை நகர்த்த தொடங்கி உள்ளார். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் குலாம் நபி ஆசாத் விலகல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குலாம் நபி ஆசாத் ஏற்கனவே அந்த மாநிலத்தில் கடந்த 2005 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் தலைமையால் பெரிதும் மதிக்கப்பட்ட நபர் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டார்.

    கட்சியின் மீது அவர் தொடுத்துள்ள தனிப்பட்ட தாக்குதல் விதம் அவரது உண்மையான பண்பு நலனை வெளிப்படுத்துகிறது. அவரது மரபணுவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    இளைஞர் காங்கிரஸ் காலம் முதல் குலாம் நபி ஆசாத்துக்கு எல்லா பதவிகளையும் காங்கிரஸ் வழங்கி உள்ளது. மத்திய மந்திரி உள்ளிட்ட பதவிகளையும் அவர் அனுபவித்து உள்ளார். நீண்ட காலம் இந்த பதவியில் இருந்து விட்டு தற்போது அவர் கட்சி மீது குறை சொல்லி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். பதவி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட அவரால் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " பழமையான கட்சி நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பயமாகவும் உள்ளது. நீண்டகாலமாக வதந்திகள் உலா வந்தன. ஆனால் காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    சமீப காலத்தில் கட்சியில் இருந்து விலகிய மிக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது விலகல் கடிதத்தை வாசிப்பது வேதனை தருகிறது" என கூறி உள்ளார்.

    ×