search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறுதியாக காங்கிரசிடம் இருந்து விடுதலையானார்-  குலாம் நபி ஆசாத் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து
    X

    ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத்

    இறுதியாக காங்கிரசிடம் இருந்து விடுதலையானார்- குலாம் நபி ஆசாத் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து

    • காங்கிரஸ் உள்கட்சி நிலைமை தெளிவாக வெளியே தெரிகிறது.
    • காங்கிரசுடனான 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டுள்ளார்.

    குவாலியர்:

    காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×