ஏழைகளின் நண்பன் எனக் கூறிய மோடியை ட்ரோல் செய்த காங்கிரஸ்
- ஏழை மக்களுக்கான கட்சி காங்கிரஸ் என அந்த கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
- பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களுக்கானது என ராகுல் காந்தி அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார்.
காங்கிரஸ்- பா.ஜனதா இடையே மிகப்பெரிய அளவில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று பா.ஜனதா பெரியபெரிய முதலாளிகளுக்காக செயல்படும் அரசு என்று காங்கிரஸ் அரசு அடிக்கடி பயன்படுத்தக் கூடியது.
காங்கிரஸ் கட்சிக்கு ஏழை மக்கள்தான் நண்பர்கள். பிரதமர் மோடிக்கு ஒரேயொரு நண்பர்தான். அது அதானி மட்டும்தான். இப்போது நடைபெறுவது ஏழைகளுக்கு உதவி செய்பவர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் இடையில்தான் போட்டி என காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.
சமீபத்தில் ஏழை மக்கள் எனது நண்பர்கள் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதை காங்கிரஸ் கிண்டல் செய்யும் வகையில் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் "என்னுடைய ஒரே நண்பர் அதானி மட்டும்தான்" என்ற வாசகத்தை பதிவிட்டு, பிரதமர் மோடி மற்றும் அதானி ஆகியோர் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த படத்தில் பிரதமர் மோடி, ஏழை மக்கள் என்னுடைய நண்பர்கள் எனக் கூறுவது போன்று வாசகம் உள்ளது.
அதற்கு நானும்தான் என அதானி பதில் அளிப்பதுபோல் உள்ளது.
Mera Mitr To Sirf Adani Hai ? pic.twitter.com/wfKi5UZYPH
— Congress (@INCIndia) November 27, 2023