இந்தியா
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை

எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் கருகி பலி

Published On 2022-01-30 14:15 GMT   |   Update On 2022-01-30 15:13 GMT
பெயிண்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஜாம்வா ராம்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து பேசிய ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறுகையில், பெயிண்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. 

அப்போது ஏற்பட்ட தவறினால் ​​தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News