இந்தியா
எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் கருகி பலி
பெயிண்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஜாம்வா ராம்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறுகையில், பெயிண்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது.
அப்போது ஏற்பட்ட தவறினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... திருப்பூர் இளநீர் விற்கும் பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு