இந்தியா
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம்
காஷ்மீர் பகுதியில் குறிப்பாக, ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்போரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர்.
தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை சுற்றிவளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று