என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
Byமாலை மலர்10 Dec 2021 4:09 PM GMT (Updated: 10 Dec 2021 4:09 PM GMT)
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வைரஸ் பரவும் ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த பரிசோதனைகளில், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள். இன்றைய பாதிப்பின்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 17 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X