இந்தியா

பசு பாலே கொடுக்கவில்லை... அதற்குள் நெய்க்கு சண்டை...! இந்தியா கூட்டணியை விமர்சித்த பிரதமர் மோடி

Published On 2024-05-23 10:33 GMT   |   Update On 2024-05-23 10:33 GMT
  • நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
  • காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் மகேந்திரகார்ஹில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

அரியானா என் மீது ஏராளமான அன்பை காண்பித்துள்ளது. உங்களுடன் ஆழமான உறவை நான் கொண்டுள்ளேன். நீங்கள் நாட்டின் பிரதமரை மட்டும் தேர்வு செய்யாமல், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பீர்கள்.

ஒருபக்கம் நீங்கள் முயற்சி செய்து சோதித்த சேவகன் மோடி. மறுபக்கத்தில் தலைமை தாங்குவது யாரென்றே தெரியவில்லை.

இந்தியா கூட்டணி வகுப்புவாதம், ஜாதி மற்றும் குடும்ப அரசியலை கொண்டுள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றம் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

இந்தியா கூட்டணி ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் பற்றி பேசி வருகிறது. இது பசு பால் கொடுக்கவில்லை. ஆனால், நெய்க்கு சண்டை தொடங்கிவிட்டது என்பதுபோது உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அரியானா மாநிலத்தில் 10 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி (நாளைமறுதினம்) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News