இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்
- பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது:-
நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் வேண்டுகோளை செயல்படுத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.