இந்தியா

ஹிஜாபை இழுத்துப் பார்த்த நிதிஷ் குமார்.. அரசு வேலையை உதறிய பெண் மருத்துவர்

Published On 2025-12-19 09:52 IST   |   Update On 2025-12-19 09:52:00 IST
  • ​​நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
  • அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் அரசு நிகழ்வின் போது ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் தனது அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளார். 

 அரசுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார். 

இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார்.

இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும் பணியில் சேர்த்த அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.   

Tags:    

Similar News