விவாதத்திற்கு அஞ்சுவது ஏன்?- மத்திய அரசுக்கு சசி தரூர் கேள்வி
- இந்தியா- சீனாவின் 2020 சண்டை குறித்து ராகுல் காந்தி பேசித் தொடங்கினார்.
- அப்போது பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது நாட்டுப்பற்று, பயங்கரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பாஜக உறுப்பினர் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இந்தியா- சீனாவின் 2020 சண்டை தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள குறிப்பை சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில் "அரசு அதிக அளவில் எதிர்வினை ஆற்றியதால் மக்களவை நடவடிக்கை முடங்கியது. விவாதத்திற்கு ஏன் அரசு பயப்படுகிறது?" என்றார்.
என் புரிதலின்படி, ராகுல் காந்தி எழுப்ப விரும்பிய விசயம் ஏற்கனவே பொதுவெளியில் உள்ள ஒன்று என்பதால், அரசு தரப்பில் ஒரு அதீத எதிர்வினை இருந்ததாக நான் நினைக்கிறேன். அவர், இன்னும் வெளியிடப்படாத ஜெனரல் நரவனேயின் ஒரு சுயசரிதையை மேற்கோள் காட்டிய 'Caravan' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் அடிப்படையிலேயே பேசினார்.
ஆகவே, முன்னாள் ராணுவ தளபதி புத்தகம் வெளியிடப்படவில்லை என்ற உண்மையை ஆட்சேபிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ராகுல் காந்தியை பேச அனுமதித்திருக்க வேண்டும். ஏனெனில் எப்படியிருந்தாலும் அந்தப் பத்திரிகை பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடியதாகவே உள்ளது.
ராகுல் காந்தி படித்த அதே கட்டுரையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நான் கூட இப்போதுதான் அதை படித்தேன். மற்றவர்களும் இப்போது அதைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.