இந்தியா

பிரபலமான உணவகங்களில் ஆய்வு - காத்திருந்த அதிர்ச்சி

Published On 2024-05-23 07:32 GMT   |   Update On 2024-05-23 07:32 GMT
  • சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
  • பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார மற்ற முறையில் உணவகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் உணவு ஆய்வார்கள் பிரபலமான உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

FSSAI அதிரடிப்படை குழு உப்பல் பகுதியில் சோதனை நடத்தியதில் செயற்கை உணவு வண்ணங்களை பயன்படுத்தியதும், 4 காலாவதியான விஜயா பால் பாக்கெட்டுகள், 65 கிலோ லேபிள் இல்லாத இஞ்சி பூண்டு விழுதுகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.


சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, சரியாக சேமிக்கப்படாத அரைத்த தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஹேர்கேப்கள், கையுறைகள், ஏப்ரான்கள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் உணவு கையாளுபவர்கள் என பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட படங்கள் சமூகவளைதலங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, காலாவதியான பால், செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது மற்றும் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள இந்த உணவகங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறும், மேலும் இது ஹைதராபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்... என்று சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News