செய்திகள்
டிகே சிவக்குமார்

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு - டி.கே.சிவகுமாரின் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி

Published On 2019-11-15 09:32 GMT   |   Update On 2019-11-15 09:32 GMT
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே.சிவகுமாரின் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

கர்நாடக முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமாரை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த செப்டம்பர் 3-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

திகார் ஜெயிலில் 51 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த மாதம் 22-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News