search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED"

    • அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
    • டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து 22-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிந்தநிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

    கோர்ட்டில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு வார காலம் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அப்போது சட்டத்தைஅ விட முதல் மந்திரி மேலானவர் இல்லை என வாதமிட்டது. இதையடுத்து தீர்ப்பை தள்ளிவைத்தார் நீதிபதி.

    • அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்தபின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், நீதிபதி அல்லி இன்று விடுப்பு எடுத்துள்ளார்.

    இதையடுத்து இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒருவாரம் அனுமதி அளித்தது.

    ஒருவாரம் விசாரணைக்குப் பிறகு இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்கா அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது. "கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக கூறுகையில் "தனிப்பட்ட தூதர உரையாடல்கள் பற்றி பேசவில்லை. நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பது ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதை யாரும் எதிர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களுடைய நடவடிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேர்தலை சந்திக்க மிகவும் சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதை நாங்கள் அறிவோம்" என்றார்.

    ஏற்கனவே அதிருப்தியில் உள்ள இந்தியா, மேலும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    • தனியார் நிறுவனம் 1.75 கோடி ரூபாயை வீணா விஜயன் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு.
    • வீணா விஜயன் நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கும் எந்த சேவையும் வழங்காத நிலையில் இந்த பணம் பரிமாற்றம்.

    கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மாநில அரசாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் பினராயி விஜய் மகளாக வீணா விஜய் மீது அமலாக்கத்துறை பணமோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். வீணா விஜயனும், அவரது ஐ.டி. நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திற்கும் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.பி. கோவிந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.பி. கோவிந்தன் கூறியதாவது:-

    நாட்டின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று அமலாக்கத்துறை. இது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை உரிய முறையில் எதிர்கொள்வோம். நீங்கள் அரசியலில் யாரையும் குறி வைக்கலாம். ஆனால் யார் குறி வைக்கிறது என்பதுதான் கேள்வி. அமலாக்கத்துறை பா.ஜனதாவுக்கு தினசரி கூலி போன்றதாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தொண்டர்களும் இதுபோன்ற தந்திரங்கள் மற்றும் வழக்குகளுக்கு சரண் அடைபவர்கள் அல்ல.

    இவ்வாறு கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

    கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனம் வீணாவின் Exalogic Solutions நிறுவனத்திற்கு முறைகேடாக 1.72 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. ஆனால் ஐ.டி. நிறுவனமான Exalogic Solutions அந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு சேவையும் செய்யவில்லை.

    எஸ்.எஃப்.ஐ.ஓ. (Serious Fraud Investigation Office) வழக்கு விசாரணையை தொடங்கியதற்கு எதிராக வீணா விஜயன் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

    எஸ்.எஃப்.ஐ.ஓ. வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    • டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • ஏழு நாள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்.

    குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை சார்பில், "அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நாங்கள் காண்காணித்து வருகிறோம். நியாயமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சட்ட செயல்முறை ஆகியவற்றை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

    அதனைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் விளக்கம் கேட்ட அமைச்சகம், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது ஆரோக்கியமற்ற முன்னுதாரணம் மற்றும் தேவையற்றது எனத் தெரிவித்துள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
    • 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.

    அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    • பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிப்பு.
    • சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கம்.

    அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக பல நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    டெல்லி, ஐதராபாத், மும்பை, குருக்ஷேத்ரா மற்றும் கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, கேப்ரிகார்னியன் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை செய்தது.

    இதில், ஒரு சோதனையின்போது வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடி ரூபாய் பணத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.

    மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

    சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் கூறுகையில்," கேலக்ஸி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஹாரிசான் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடட் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு ரூ. 1,800 கோடி ரூபாய் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணம் அனுப்பியுள்ளன.

    போலியான சரக்கு சேவைகள், இறக்குமதிகள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் வலை மூலம் அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு.
    • அவரை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடி வீட்டிடை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.

    டெல்லி மாநில முதல்வராக அரவிந்த கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு கைது செய்தது. அவரை காவலில் வைத்து விசாரிக்க ஒரு வாரம் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவரது கைது கண்டித்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நடத்தினால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    வருகிற 31-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முற்றுகை போராட்டம் பேரணியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பா.ஜனதா பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
    • நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (மார்ச் 21-ந்தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்தனர்.

    நேற்று டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வருகிற 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி, அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    இந்த நிலையில் இன்று மாலை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "அமலாக்கத்துறை கைது செய்தது. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது சட்டவிரோதம்.

    விசாரணையில் இருந்து விடுவிக்க அவருக்கு தகுதி உண்டு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிறு என்பதால் அதற்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

    கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும், ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்துவேன். விரைவில் விடுதலையாகி டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர்.
    • அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும் என ஜெர்மனி அதிகாரி கருத்து.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தன்மீது கைது போன்ற கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

    அப்போது ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த, அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

    நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் உயர் அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "இதுபோன்ற கருத்துக்கள் எங்களது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், எங்களது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட உட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். சட்டம் அதன் வழியில் அதன் நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விசயத்தில் ஒருதலைபட்சமான அனுமானம் மிகவும் தேவையற்றதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

    • ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி.
    • பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் ஜாமின் கிடைப்பது கடினம்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ஆம் ஆத்மி கட்சி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதிஷி கூறுகையில் "இந்த நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு மரியாதையுடன் உடன்பாடு இல்லை என்பதை பணிவுடன் சமர்ப்பிக்க விரும்புகிறோம். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை.

    அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால், இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலும் ஜாமின் கிடைப்பது கடினமாகும்.

    மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்தது நாட்டின் ஜனநாயக கொலை" எனத் தெரிவித்துள்ளார்.

    • கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
    • வரும் 28-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ×