என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "UP MLA"
- அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது.
- முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
மேலும் அவரது மகனும், மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வுமான அப்பாஸ் அன்சாரி (வயது 30) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்குகள் தொடர்பாக முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்