என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DK Shivakumar"
- தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
- தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.
பெங்களூரு:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
- பெங்களூருவில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் வந்தது.
- காலையில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
பெங்களுரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். முன் எச்சரிக்கையாக பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். மேலும் அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் விரைந்து சென்று அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை, பள்ளி விடுதி மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.

சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தது. காலையில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைத்தனர்.
மின்னஞ்சல் அனுப்பி மர்ம நபர் புரளியைக் கிளப்பி இருப்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.டி.யை கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடம் ஒன்று எனது வீட்டிற்கு எதிரே உள்ளது, இதை ஆய்வுசெய்ய இங்கு வந்தேன். இது சில மர்ம நபர்களின் போலி அழைப்பு போல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.
- 2017-ல் டிகே சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
- அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி நடைபெற்றபோது, டி.கே. சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரிச்சோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இதனடிப்படையில் டி.கே. சிவக்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கர்நாடக அரசிடம் அனுமதி கேட்டது. அப்போதைய பா.ஜனதா அரசு அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது டி.கே. சிவக்குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரிசபை கூட்டத்தில், டி.கே. சிவகுமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி வெளியானது.
இந்த நிலையில் மந்திரிசபை முடிவு குறித்து டி.கே. சிவகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டி.கே. சிவகுமார் பதில் அளிக்கையில் "நான் செய்தித்தாளில்தான் இந்த தகவலை படித்து தெரிந்து கொண்டேன். மந்திசபை கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. யார் பேச வேண்டுமோ, அவர்கள் பேசுவார்கள்.
நான் இரண்டு நாட்கள் தெலுங்கானாவில் பிரசாரம் செய்கிறேன். கட்சி கேட்டுக்கொண்டால் அதை நீட்டித்துக் கொள்வேன்" என்றார்.
- ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாட்டை காங்கிரஸ் கவனிக்கவில்லை- குமாரசாமி.
- வாக்குறுதிகளுக்கும் குமாரசாமிக்கும் இடையே உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்- டி.கே. சிவகுமார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்து, தொடங்கி வைத்தது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, "அருகில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கர்நாடகாவில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகளை அவர்கள் கவனிக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு துணை முதல்வர் சிவகுமார் "குமாரசாமிக்கும் ஐந்து வாக்குறுதிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மதர்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் "டுப்ளிகேட் துணை முதல்வர் (Duplicate Chief Minister) மிகவும் கோபப்படுகிறார். அதிகமான கோபம் உடல் நலத்திற்கு மோசமானது. இந்த எச்சரிக்கையை அவர் நினைவில் வைத்துக் கொண்டால், நல்லது. குமாரசாமிக்கும் உத்தரவாதங்களுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கிறது என்று ஞான முத்துக்களை வழங்கியுள்ளார். பித்தம் தலைக்கேறி, மூளை செயலிழக்கும்போது, ஒருவர் இப்படி பேசுகிறார்" பதிலடி கொடுக்கப்பட்டது.
குமாரசாமி கூறுகையில் "இது கர்நாடகா. கர்நாடகா என்பது டி.கே. சிவகுமார் குடியரசு அல்ல. ஜனநாயகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளன. கேள்விகள் கேட்பதற்காக மக்கள் எனக்கு எதிர்க்கட்சி பதவியை கொடுத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
- அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.
இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அத்துடன், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.
இதற்கிடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.டிஎஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தெரிவித்துள்ளனரா? அதுபற்றி கருத்து என கேள்வி எழுப்பியதற்கு, அவர் ஆவேசமாக கூறியதாவது:
கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் தொடர்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.
தேவகவுடா எங்களுடன் வந்துவிடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்குகிறோம் என காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு அளித்துவிட்டு போகிறோம். இதை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள், 5 பேர் வருகிறார்கள், பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? என தெரிவித்தார்.
- மாநில ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்த போது வருமான வரித்துறை சோதனை நடந்தது
- 2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார்
கடந்த மே மாதம் முதல், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.வின் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இந்திய வருமான வரித்துறை தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தொடர்புடைய புது டெல்லி உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. அதில் ரூ.8 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைத்ததாகவும் அவரது இல்லத்தில் ரூ.41 லட்சம் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கான நீதிமன்றத்தில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டது. சிவகுமார் மீது உடனடியாக அமலாக்கத்துறையும் (ED) வழக்கு பதிவு செய்தது.
2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்றப்பட்டது.
இதை எதிர்த்து சிவகுமார் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்ய கோரியும் விசாரணைக்கு தடை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரலில் இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தாலும், விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமார் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இத்தீர்ப்பை அளித்த நீதிபதி கே. நடராஜன், வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வை டிகே சிவகுமாருக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், அவரது துணை முதல்வர் பதவிக்கு சிக்கல் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு எனவும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த தீர்ப்பை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் தகவல் அறிக்கையில் சிவகுமார் குடும்பத்தினருக்கு 2013 ஏப்ரலில் சுமார் ரூ.34 கோடி அளவில் இருந்த சொத்து மதிப்பு 2018ல் சுமார் ரூ.163 கோடியாக உயர்ந்ததாகவும் இது அவர்களது வருமானத்திற்கும் அதிகமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
- மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம்
பெங்களூரு:
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்குத் தேவையான எல்லா வகையான சட்ட நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளோம்.
கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை புதிதாக எந்த பயிரையும் விளைவிக்க வேண்டாம் என்று வேளாண்மை துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.
அடுத்த மாதத்தில் சிறிது மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது
- தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூடுகிறது. தமிழக அரசு இதில் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இதற்கிடையே தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கூற கர்நாடகா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
- வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
பெங்களூரு:
காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.