உலகம்
null

ராணுவ வீரர்கள் அனைவரையும் இந்தியா திரும்பப் பெற்றது: மாலத்தீவு அதிபர் மாளிகை

Published On 2024-05-10 14:43 GMT   |   Update On 2024-05-10 14:44 GMT
  • 89 ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை பராமரித்து வந்தனர்.
  • ஏற்கனவே இரண்டு கட்டமாக 51 வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றிருந்தது.

மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முகமது முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றபின், அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினார். இருநாட்டு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப்பெற இந்தியா ஒப்புக்கொண்டது.

மே 10-ந்தேதிக்குள் படிப்படியாக அனைத்து வீரர்களையும் திரும்பப்பெற இந்தியா சம்மதம் தெரிவித்தது.

அதன்படி கடந்த மார்ச் முதல்கட்டமாக சில வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றது. ஏப்பரல் மாதம் 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் சில வீரர்களை திரும்பப்பெற்றது. 2 கட்டங்களாக 51 வீரர்களை திரும்பப்பெற்றது.

இந்த நிலையில் இன்றோடு அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்பப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா ராணுவ வீரர்களை திரும்பப்பெற மே 10-ந்தேதி (இன்று) கடைசி நாளாகும். இந்த நிலையில் வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 90 ராணுவ வீரர்கள் மூன்று ராணுவ தளங்களில் பணியாற்றி வந்தனர்.

இந்தியா வீரர்கள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ஏர்கிராஃப்டை இயக்கி வந்ததுடன், பராமரித்து வந்தனர். மேலும், மாலத்தீவுக்கு இந்திய நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பிற வளங்களைப் பயன்படுத்துவதில் பங்களித்தனர்.

Tags:    

Similar News