செய்திகள்
அருண் ஜெட்லி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி

Published On 2019-08-09 14:43 GMT   |   Update On 2019-08-09 14:43 GMT
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி (66), சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.
 
இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News