செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தில் எம்பிக்கள் நாளை தவறாமல் பங்கேற்க வேண்டும் - பாஜக, காங். கொறடாக்கள் உத்தரவு

Published On 2018-12-30 08:53 GMT   |   Update On 2018-12-30 08:53 GMT
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
புதுடெல்லி:

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
 
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.



இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
Tags:    

Similar News