செய்திகள்

பாஜக அரசை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி

Published On 2018-06-14 13:53 GMT   |   Update On 2018-06-14 13:53 GMT
பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் மற்றும் பீகாரில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஜார்கண்ட் மாநில பாஜக அரசை கண்டித்து போராட்டம் தொடங்க உள்ளது. #NDA #BJP #JDU
ராஞ்சி:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகிக்கிறது. மேலும், பீகாரில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில பிரிவு அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கொடி பிடித்துள்ளது.

பீகாரை விட ஜார்காண்ட் அதிக கனிம வளங்களை கொண்டது. ஆனாலும், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 25-ம் தேதி போராட்டம் தொடங்க உள்ளோம். பீகாரில் மட்டுமே எங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி, ஜார்கண்டில் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொறுப்பாளர் ஷரவன் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News