search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ் குமார்"

    • கடந்த முறை பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் தலா 17 இடங்களில் போட்டி.
    • இந்த முறை பா.ஜனதா அதே 17 இடங்களில் போட்டியிடுகிறது. நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுடன் தேசிய கட்சிகள் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்பும்.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதாவுடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வராக இருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ் குமார், 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 40 இடங்களை கொண்ட பீகாரில் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுக்கு 17 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 இடங்களும், சிராக் பஸ்வானின் (மறைந்த ராம் விலாஸ் பஸ்வான்) எல்ஜேபி கட்சிக்கு ஐந்து இடங்களும், உபேந்த்ரா குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பீகாரில் நிதிஷ் குமார் கட்சி பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக ஒரு இடம் குறைவாக பெற்றுள்ளது. இதன்மூலம் அரசியல் களத்தை பா.ஜனதா மாற்றி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ல் பாஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    • சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

    மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

    சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.

    பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.

    • 2023ல் உருவான இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி, ஜேடி(யூ) கட்சிகள் இணைந்திருந்தன
    • நிதிஷ் குமாருக்காக கதவு திறந்தே உள்ளது என்றார் லாலு

    வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைக்கான 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    பா.ஜ.க.வை தலைமையாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணியும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக வியூகங்களை அமைத்து வருகின்றன.

    கடந்த வருடம் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்திருந்தன.

    பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார்.

    ஆனால், 2024 ஜனவரி மாத இறுதியில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க.வை தலைமையாக கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து, மீண்டும் முதல்வராகி, அவர்கள் ஆதரவுடன் பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையையும் நிருபித்தார்.

    இந்நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பேட்டியளித்தார். அவரிடம் நிதிஷ் குமார், ராகுல் காந்தி உட்பட பலரை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    அப்போது லாலு கூறியதாவது:

    நிதிஷ் குமார் மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைய விரும்பினால் இணையலாம். அவருக்காக கதவு திறந்தே உள்ளது.

    இந்திய பிரதமராவதற்கு ராகுலிடம் என்ன குறை உள்ளது? அவரிடம் எந்த குறையும் இல்லை.

    இவ்வாறு லாலு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத கட்சிகள், எதிரெதிர் கூட்டணிகளுக்கு மாறுவது தொடரலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ், பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வரானார்
    • 243 இடங்கள் உள்ள சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 இடங்கள் வேண்டும்

    பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்.

    கடந்த ஜனவரி 28 அன்று அக்கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

    இன்று நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    பீகார் மாநில சட்டசபையில் 243 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.

    முன்னதாக, சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து சவுத்ரி பதவி விலகி, துணை சபாநாயகர் மகேஸ்வர் அசாரி (Maheswar Hazari) புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார்.

    ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினர். தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.



    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    • லாலு கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.
    • பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.

    திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதனால் இன்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

    இதற்கிடையே பீகாரில் எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

     

    நேற்று எம்.எல்.ஏ.-க்களுடன் தேஜஸ்வி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே தேஜஸ்வி யாதவ் வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தேஜஸ்வி வீட்டிற்குள் நுழைந்து எம்.எல்.ஏ.-க்களிடம் விரும்பத்தாக நிகழ்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டுாம்" என ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

    243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் மெஜரிட்டியை நிரூபிக்க 123 பேர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ் குமாருக்கு ஆதரவு

    நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது.

    • இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.
    • பா.ஜனதா ஆதரவுடன் பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    இதனால் பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். வருகிற 12-ந்தேதி பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேச இருக்கிறார். பீகார் துணை முதல்வர்கள் சம்ராத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    பிரதமர் மோடியை தவிர்த்து உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார்- மோடி (கோப்புப்படம்)

    பீகார் மாநிலத்தில் ஆறு மாநிலங்களவை இடத்திற்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா இரண்டு எம்.பி.க்களை கொண்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜதான தலா ஒரு எம்.பி.க்களை கொண்டுள்ளது.

    இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு திரும்பிய பின், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.

    • பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ் குமார்.
    • பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்தது நிதிஷ் குமார் எனக் கூறிய சரத் பவார்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியதாவது, "பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்தது நிதிஷ் குமார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவரது செயலும் பாஜக-வுக்கு எதிராகதான் இருந்தது. ஆனால் கடந்த 10-15 நாட்களில் தனது சித்தாந்தத்தை விட்டு வெளியேறி, தற்போது பா.ஜ.க-வில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். மக்கள் நிச்சயம் அவருக்கு பாடம் புகட்டுவார்" எனத் தெரிவித்தார்.

    • பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
    • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

    பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • 2005ல் முதல்முறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்
    • இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் என்பது குறிப்பிடத்தக்கது

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். புது அரசு உருவாகும் வரை நிதிஷ் காபந்து முதல்வராக நீடிப்பார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசியல் பயணத்தில் அதிக யு-டர்ன் அடித்த தலைவர்

    2000ல் முதல் முறையாக முதல்வரான நிதிஷ், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை துறந்தார்.

    2005ல் பா.ஜ.க.வுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.


    2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நரேந்திர மோடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய கூட்டணியில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தீவிரமாக எதிர்த்த நிதிஷ், சுமார் 17-வருட கால கூட்டணியை முறித்தார்.


    தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டார். ஆனால், நிதிஷ் குமாரால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அக்கட்சியின் ஜிதேன் ராம் மஞ்சி முதல்வரானார்.

    2015 பீஹார் சட்டசபை தேர்தலில், தனது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    ஆனாலும், 2016ல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி செயலாக்கத்தையும் லல்லு உட்பட பலர் எதிர்த்தாலும், நிதிஷ் ஆதரித்தார்.


    2017ல் லல்லுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார். ஆனால், உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

    2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

    2022 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.விற்கு மாநிலத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணியை மீண்டும் உடைத்தார்.

    ஆனால் அடுத்த நாள், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெல்வதையும், பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவதையும் தடுக்க மோடி எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, கடந்த வருடம், காங்கிரஸ் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளின் ஒத்துழைப்புடன் "இந்தியா கூட்டணி" எனும் பெரும் கூட்டணி உருவானது.

    அந்த கூட்டணியில் மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை போல் முக்கிய உறுப்பினராக இருந்தவர் நிதிஷ் குமார்.


    இந்நிலையில், தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை துறந்து விட்டார்.

    மீண்டும் தான் எதிர்த்த பா.ஜ.க.வுடன் இணைந்து அக்கட்சி பிரமுகர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, நிதிஷ் முதல்வராக முயல்வதாக வெளியாகி உள்ள தகவல்களால் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்த்தவர்களிடமே ஆதரவு கோரி முதல்வர் பதவியில் தொடர்வது நிதிஷ் குமாருக்கு கை வந்த கலை என சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார்.
    • இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். அவருடன் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை பேச முயன்றார். ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜூன கார்கே நிதிஷ் குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ் குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார்" எனக் கூறினார்.

    மேலும், இந்தியா கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தையும் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்ததாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, "அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

    ×